கோவையில் டெங்கு பரவலை தடுக்க 'அபேட்' மருந்து தெளிப்பு பணிகள் தீவிரம்..!

மேற்கு மண்டல சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று 'அபேட்' மருந்தை தொட்டிகளில் ஊற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மேற்கு மண்டல சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தில்‌ டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள்‌ வீடு வீடாகச்‌ சென்று அபேட்‌ மருந்தை தொட்டிகளில்‌ ஊற்றுவது, தேவையில்லாத பொருட்களை அகற்றுவது, பொது மக்கள்‌ தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில்‌ கொசுப்‌ புழுக்கள்‌ உள்ளனவா என்பதை கண்டறிவது போன்ற பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா அறிவுறைகள்‌ வழங்கினார்‌.



இதேபோல், மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.33-க்குட்பட்ட பியூன்ஸ்‌ காலனி, டேங்க்‌ ரோடு ஆகிய பகுதிகளில்‌ தூய்மைப்‌ பணியாளர்கள்‌ மக்கும்‌ குப்பை மற்றும்‌ மக்காத குப்பைகளை தரம்‌ பிரித்து சேகரிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



உடன்‌ துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌, மேற்கு மண்டல குழு தலைவர்‌ கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, மேற்கு மண்டல உதவி ஆணையர்‌ சரவணன்‌, 33-வது வார்டு மாமன்ற உறுப்பினர்‌ எ.கிருஷ்ணமூர்த்தி மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ இருந்தனர்.‌



மேலும், கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.9-க்குட்பட்ட விளாங்குறிச்சி, கிராம நிர்வாக அலுவலகம்‌ அருகில்‌ உள்ள வாய்க்காலை நமக்கு நாமே திட்டத்தின்கீழ்‌ தூர்வாரும்‌ பணிகள்‌ நடைபெற்றது.



Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...