கோவை அடுத்த மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் வேகமாக சென்ற கார் மரத்தின் மீது மோதி விபத்து - பள்ளி மாணவர்கள் பலி….!

சுற்றுலா சென்று விட்டு வந்த போது கார் நிலை தடுமாறி மரத்தில் மோதிய விபத்தில் இரு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை அடுத்த மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் சென்ற கார் சாலை ஓர மரத்தின் மீது மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பாரதி நகர், காட்டூர், மகாதேவபுரம் பகுதிகளை சேர்ந்தவர்கள் முகமது தெளபீக்(16), முகமது ஆரிப்(16), முகமது இர்பான்(18), காலித்(16), அர்சத்(16). இவர்களில் முகமது தெளபீக், முகமது ஆரிப், அர்சத் உள்ளிட்ட மூவரும் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயின்று வருகின்றனர்.

கார் ஓட்டிய முகமது இர்பான் கோவை தனியார் கல்லூரியில் முதலாமாண்டு பி.காம் பயின்று வருகிறார். காலித் மேட்டுப்பாளையம் மகாஜன பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் இவர்கள் 5-பேரும் நீலகிரி மாவட்டம் கோத்தகிரிக்குச் சுற்றுலா சென்றுள்ளனர்.

இன்று அதிகாலை கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்துள்ளனர். அப்போது, காரை கல்லூரி மாணவர் முகமது இர்பான் ஓட்டியுள்ளார்.



இந்நிலையில் கார் மேட்டுப்பாளையம் வரும் வழியில் கோத்தகிரி சாலையில் திடீரென நிலைதடுமாறி அருகே இருந்த மரத்ததின் மீது பயங்கரமாக மோதியுள்ளது.

இவ்விபத்தில் முகமது தெளபீக், முகமது ஆரிப் உள்ளிட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியாகியுள்ளனர். மேலும், மூவர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் விரைந்து சென்று உயிரிழந்த இரு மாணவர்களின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மூவரும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுற்றுலா சென்று விட்டு வந்த போது கார் நிலை தடுமாறி மரத்தில் மோதிய விபத்தில் இரு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...