கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏ ஆறுக்குட்டியிடம் நடந்த விசாரணை நிறைவு

விசாரணை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளேன். விசாரணை நேர்மையாக தான் நடைபெறுகிறது. எப்போது, விசாரணைக்கு அழைத்தாலும் ஒத்துழைக்க தயார் என்று ஆறுக்குட்டி தெரிவித்துள்ளார்.



கோவை: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் 2017ம் ஆண்டு காவலாளி ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து, அங்கிருந்த பொருட்களை கும்பல் ஒன்று திருடிச்சென்றது. 

இது தொடர்பாக நீலகிரி மாவட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜூக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில் கனகராஜ் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் கனகராஜ் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் சுதாகர் தலைமையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து விசாரிப்பதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படைகள் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்ட எஸ்பி ஆஷிஸ் ராவத் தலைமையிலான தனிப்படை அதிகாரிகள் முக்கிய நபர்களை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே ஜெயா தொலைக்காட்சியின் இயக்குனர்களில் ஒருவரான விவேக் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அழைத்து விசாரிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று கவுண்டம்பாளையம் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் ஆறுகுட்டியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கனகராஜ் ஜெயலலிதாவிடம் ஓட்டுனராக பணியாற்றிய போது அவரது நடத்தை காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து கனகராஜ், ஆறுகுட்டியிடம் சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் விபத்தில் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாகவும் ஆறுகுட்டியுடன் கனகராஜ் போனில் பேசி இருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக தனிப்படை போலீசார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டியிடம் விசாரணை மேற்கொண்டனர்.



காலை 11:30 மணியளவில் தொடங்கிய இந்த விசாரணையில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் மற்றும் நீலகிரி மாவட்ட எஸ்பி ஆஷிஸ் ராவத் உட்பட முக்கிய காவல்துறை அதிகாரிகள் நேரடியாக விசாரணை மேற்கொண்டனர். 



சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற விசாரணை முடிவடைந்ததை அடுத்து, வெளியே வந்த ஆறுக்குட்டி செய்தியாளர்களை சந்தித்தார். 



அப்போது பேசிய அவர் ஒன்றரை ஆண்டு கனகராஜ் தன்னிடம் பணி புரிந்த நிலையில் தன்னை விசாரணைக்கு அழைத்ததாகவும், தனக்கு தெரிந்த உண்மைகளை சொல்லி இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக சொல்லி இருப்பதாகவும், கனகராஜ் தன்னிடம் டிரைவராக வேலை பார்த்தது உண்மைதான் எனவும் எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு வருவதாக உறுதி அளித்துள்ளதாகவும் அவர் கூறினார். விசாரணை சரியாக நடைபெற்றது எனவும் கனகராஜ் தன்னிடமிருந்து வேலையை விட்டு சென்றவுடன் அவருடன் போனில் தொடர்பு கொள்ளவில்லை என ஆறுகுட்டி தெரிவித்தார். விசாரணையின் போது, அவரது மகளும் மாவட்ட கவுன்சிலருமான அபிநயா, ஆறுகுட்டியின் மகன் ஆகியோர் அவரை சென்று பார்த்துவிட்டு வந்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...