மண்‌ என்பது வற்றாத வளம்‌ அல்ல; அது நம்‌ வாழ்வின்‌ ஆதாரம்:‌ ஐ.நா சுற்றுச்சூழல்‌ அமைப்பில்‌ சத்குரு பேச்சு!

நாம்‌ உயிர்‌ வாழ்வதற்கு ஆதாரமாக விளங்கும்‌ மண்‌ வளத்தை பாதுகாக்க விழிப்புணர்வுடன்‌ கூடிய நடவடிக்கைகளை அரசாங்கங்கள்‌ மேற்கொள்ள வேண்டும்‌ என்று ஐ.நா சுற்றுச்சூழல்‌ அமைப்பின்‌ நிகழ்ச்சியில்‌ சத்குரு பேசினார்‌.


ஜெர்மனி நாட்டில்‌ உள்ள ஐ.நாவின்‌ பாலைவனமாதலை தடுக்கும்‌ அமைப்பின்‌ (UNCCD) தலைமை அலுவலகத்தில்‌ நடந்த நிகழ்ச்சியில்‌ அந்த அமைப்பின்‌ நிர்வாக செயலாளர்‌ இப்ராகிம்‌ தியாவ்‌ அவர்களுடன்‌ சத்குரு நேற்று முன்தினம் (ஏப்ரல்‌ 13) கலந்துரையாடினார்‌.



அப்போது அவர்‌ கூறுகையில்‌, “உலகில்‌ உள்ள பல அரசாங்கங்கள்‌ மண்ணை ஒரு செயலற்ற ஒரு பயன்பாட்டு பொருளாகவே கையாள்கின்றன. சில செயற்கை உரங்களை கூடுதலாகவோ, குறைவாகவோ பயன்படுத்தி மண்‌ வளத்தை நிர்வகித்து விட முடியும்‌ என கருதுகின்றனர்‌. இந்த அணுகுமுறையை நாம்‌ முதலில்‌ மாற்றி கொள்ள வேண்டும்‌. மண்‌ என்பது வற்றாத ஒரு பயன்பாட்டு பொருள்‌ அல்ல; அது நம்‌ வாழ்வின்‌ ஆதாரம்‌. இந்த விழிப்புணர்வுடன்‌ மண்‌ வளப்‌ பாதுகாப்பை நாம்‌ மேம்படுத்த வேண்டும்‌. நிகழ் காலத்தில்‌ நாம்‌ எதுர்‌ கொண்டு வரும்‌ பருவநிலை மாற்றம்‌, பல்லுயிர்‌ பெருக்கப்‌ பாதிப்பு மற்றும்‌ சூழலியல்‌ அழிவு போன்ற பல்வேறு முக்கிய சுற்றுச்சூழல்‌ பிரச்சினைகளுக்கு மண்‌ அழிவு தான்‌ மிக அடிப்படையான காரணம்‌. அதை சரி செய்தால்‌ மற்ற பிரச்சினைகளையும்‌ எளிதில்‌ சரி செய்துவிட முடியும்‌.” என்றார்‌.



மண்‌ அழிவை தடுப்பதற்கும்‌, இழந்த வளத்தை மீட்டெடுப்பதற்கும்‌ மனிதர்கள்‌ விழிப்புணர்வுடன்‌ செயல்பட வேண்டியது அவயம்‌ என்பதை சத்குருவும்‌, இப்ராகிம்‌ தியாவும்‌ இணைந்து வலியுறுத்தினர்‌.

மண்‌ வளத்தை பாதுகாக்க அரசாங்கங்கள்‌ உரிய சட்டங்கள்‌ இயற்ற வலியுறுத்தி சத்குரு மேற்கொண்டுள்ள 30,000 கி.மீ மோட்டார்‌ சைக்கிள்‌ பயணத்தின்‌ ஒரு பகுதியாக அவர்‌ இந்நிகழ்ச்சியில்‌ கலந்து கொண்டார்‌. ஐ.நாவின்‌ பாலைவனமாதலை தடுக்கும்‌ அமைப்பின் அலுவலகத்தில்‌ அதன்‌ நிர்வாக குழு உறுப்பினர்கள்‌ சத்குருவிற்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்‌.



வரும்‌ மே மாதம்‌ ஐ.நாவின்‌ பாலைவனமாதலை தடுக்கும்‌ அமைப்பின் சார்பில்‌ ஐவரி கோஸ்ட்‌ நாட்டல்‌ நடத்தப்பட உள்ள COP15 சுற்றுச்சூழல்‌ மாநாட்டிலும்‌ சத்குரு பங்கேற்று சிறப்புரை நிகழ்த்த உள்ளார்‌. இதில்‌ உலகில்‌ உள்ள 150-க்கும்‌ மேற்பட்ட நாடுகளின்‌ பிரதிநிதிகள்‌ பங்கேற்க உள்ளனர்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...