பொள்ளாச்சி, கிணத்துக்கடவு அருகே உள்ள தேவராயபுரம் பகுதியில் உள்ள தென்னை தோப்புக்குள் தனியாக வெள்ளை நிற மயில் ஒன்று ஜாலியாக உலா வருவதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
கோவை: விவசாய தோட்டப் பகுதிகளில் தானியங்களை சாப்பிடுவதற்காக அதிகளவில் மயில்கள் உலா வருகிறது பச்சை, நீலம் போன்ற வண்ணங்கள் கலந்து நீளமான தோகையுடன் சுற்றி வருவது வழக்கம். ஆனால் தற்போது அதற்கு மாறாக பொள்ளாச்சி அடுத்துள்ள கிணத்துக்கடவு அருகே உள்ள தேவராயபுரம் பகுதியில் தென்னை தோப்புக்குள் தனியாக வெள்ளை நிற மயில் ஒன்று ஜாலியாக உலா வந்தது.
இதனை அப்பகுதி கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். கிராமப் பகுதிகளில் இது போன்ற முழுமையான வெள்ளை நிறம் கொண்ட மயில்களை யாரும் அவ்வளவாக பார்த்ததில்லை எனவும், இதுபோன்ற வெள்ளை நிறம் மயில்களை பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருப்பதாகவும் கிராம மக்கள் கூறினார்கள்.
இதனை அப்பகுதி கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். கிராமப் பகுதிகளில் இது போன்ற முழுமையான வெள்ளை நிறம் கொண்ட மயில்களை யாரும் அவ்வளவாக பார்த்ததில்லை எனவும், இதுபோன்ற வெள்ளை நிறம் மயில்களை பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருப்பதாகவும் கிராம மக்கள் கூறினார்கள்.