எரிபொருள் சேமிப்பில் இலக்கை எட்டியதற்காக, கோவை கோட்ட அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு பரிசுத்தொகை, கேடயம், பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை, கோவை கோட்ட மேலாண் இயக்குனர் ஆறுமுகத்திடம், தேசிய பெட்ரோலியத்துறை அமைச்சக செயலர், பங்கஜ் ஜெயின் வழங்கினார்.
கோவை:தேசிய அளவில் எரிபொருள் சிக்கனத்தில் இரண்டாம் இடம் பெற்றதற்காக, அரசு போக்குவரத்துக் கழகத்தின் கோவை கோட்டத்துக்கு, பரிசுக் கேடயம் வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் செயல்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில்
சிக்கனமாக டீசல் பயன்படுத்திய போக்குவரத்து கழகங்களுக்கு, கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கென நாட்டின் அனைத்து அரசு போக்குவரத்துக் கழக கோட்டங்களின் செயல்பாடும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
இதில், கிராமப்புற சேவைக்கென இயக்கப்படும் பேருந்துகளின் மைலேஜ் 5.37 இல் இருந்து 5:57 ஆக உயர்ந்துள்ளதால், நாள் ஒன்றுக்கு 3,300 லிட்டர் டீசல் வரை மிச்சப்படுத்த முடிந்ததாக கோவை கோட்ட போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், எரிபொருள் சேமிப்பில் இலக்கை எட்டியதாக, கோவை கோட்ட
அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு தேசிய அளவில் இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.
இதற்கான, பரிசுத்தொகை, கேடயம், பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை, கோவை கோட்ட மேலாண் இயக்குனர் ஆறுமுகத்திடம், தேசிய பெட்ரோலியத்துறை அமைச்சக செயலர், பங்கஜ் ஜெயின் வழங்கினார்.
நாடு முழுவதும் செயல்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில்
சிக்கனமாக டீசல் பயன்படுத்திய போக்குவரத்து கழகங்களுக்கு, கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கென நாட்டின் அனைத்து அரசு போக்குவரத்துக் கழக கோட்டங்களின் செயல்பாடும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
இதில், கிராமப்புற சேவைக்கென இயக்கப்படும் பேருந்துகளின் மைலேஜ் 5.37 இல் இருந்து 5:57 ஆக உயர்ந்துள்ளதால், நாள் ஒன்றுக்கு 3,300 லிட்டர் டீசல் வரை மிச்சப்படுத்த முடிந்ததாக கோவை கோட்ட போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், எரிபொருள் சேமிப்பில் இலக்கை எட்டியதாக, கோவை கோட்ட
அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு தேசிய அளவில் இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.
இதற்கான, பரிசுத்தொகை, கேடயம், பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை, கோவை கோட்ட மேலாண் இயக்குனர் ஆறுமுகத்திடம், தேசிய பெட்ரோலியத்துறை அமைச்சக செயலர், பங்கஜ் ஜெயின் வழங்கினார்.