இந்தியாவில் தயாரிக்கபட்ட இலகு ரக விமானம் சூலூர் விமான படை தளத்தில் இணைக்கபடும் என விமான படை அதிகாரி தகவல்


இந்தியாவில் தயாரிக்கபட்ட தேஜாஸ் இலகு ரக விமானம் 2018-ல் சூலூர் விமான படை தளத்தில் இணைக்கப்படும்  என விமான படை அதிகாரி சுனில்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.



குடியரசு தினத்தின் ஒரு பகுதியாக சூலூர் படை தளத்தில் விமான படை செயல்பாடுகள் குறித்த கண்காட்சி மற்றும் செயல் விளக்கம் இன்று நடைபெற்றது.

தற்போது விமான சேவையில் உள்ள இந்தியாவில் 2003-ல் தயாரிக்கபட்ட நவீன இலகு ரக எம்.கே-1 ஹெலிகாப்டர், இங்கலாந்தில் 1964ல் தயாரிக்கபட்ட ஆரோ-748 விமானம், மணிக்கு 540 கி.மீட்டர் வேகத்தில் பொருட்களை ஏற்றி செல்லுதல், பயிற்சி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பயணத்திற்கு உபயோகிக்கப்படும்  ஆண்டநோவ்-32 விமானம் மற்றும் ரஷ்யாவில் உருவாக்கபட்ட எம்.ஐ-17வி-5 ஆகியன கண்காட்சியில் இடம் பெற்றன.

மேலும், போர் மற்றும் கலவர காலங்களில் வீரர்கள் உபயோகிக்கும் ராப்ளிங் கயிறு, விளக்குகள், பாதுகாப்பு கவசங்கள் மற்றும் கூடாரங்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.





இக்கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக தீவிரவாத தாக்குதலின் போது விமான படை வீரர்கள் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பது குறித்த ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் இறங்கி தாக்குதல் நடத்தும் செயல் விளக்கம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இதுகுறித்து சூலூர் விமான படை தள அதிகாரி ஏர் கமோடர் சுனில்குமார் கூறும்போது, சுதந்திர தின விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்திய விமான படை செயல்பாடுகள் பற்றி தெரிந்து கொள்ளும் நோக்கிலும் இந்த கண்காட்சி நடத்தப்படுவதாக கூறினார்.

மேலும், இந்த கண்காட்சியில் 7000-கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கபடுவதாக கூறியவர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் இலகு ரக விமானம் 2018-ல் சூலூர் விமான படை தளத்தில் இணைக்கபடும் என்றும் தெரிவித்தார்.

Newsletter

மூலப்பொருள் விலை உயர்வால் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயந்திர கட்டணம் உயர்த்த 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் முடிவு

கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், Job Work நிறுவனங்கள் CNC,...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆசையில் சிக்கும் இளைஞர்கள்: கோவை போலீசார் எச்சரிக்கை

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்போடியாவில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தென்கிழக்கு ஆச...

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...