இந்த வழக்கில் கட்டட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 5-ஆயிரம் விதித்து, கோவை குண்டுவெடிப்பு வழக்கு சிறப்பு கோர்ட் நீதிபதி பாலு இன்று தீர்ப்பு அளித்தார்.
கோவை: கோவையில் முன்பகை காரணமாக சக கட்டட தொழிலாளியை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், காய்தே மில்லத் புதுவீதியில் வசித்து வந்தவர் ஷேக் அப்துல்லா (36). இவரும், திருச்சி, புங்கனுாரை சேர்ந்த தங்கப்பன்(58), என்பவரும் கோவையில் ஒன்றாக தங்கி கட்டட வேலைக்கு சென்றனர்.
காந்திபுரம், 9-வது தெருவில்வேலை செய்த போது, தங்கப்பன் மொபைல் போனை, ஷேக் அப்துல்லா உடைத்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதனால் முன் விரோதம் ஏற்பட்டு, 18–9–2021 அன்று மாலையில், ஷேக் அப்துல்லாவை கத்தியால் குத்தி தங்கப்பன் கொலை செய்தார்.
காட்டூர் போலீசார்,தங்கப்பனை கைது செய்தனர். இந்த வழக்கில் தங்கப்பனுக்குஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 5 ஆயிரம் விதித்து, கோவை குண்டுவெடிப்பு வழக்கு சிறப்பு கோர்ட் நீதிபதி பாலு,இன்றுதீர்ப்பு அளித்தார்.
இதில் அரசு தரப்பு வழக்கறிஞர் கார்த்திகேயன் மற்றும் காட்டூர் காவல் ஆய்வாளர் லதா அவர்கள் புலன் விசாரணை அதிகாரிஎதிரியை கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், காய்தே மில்லத் புதுவீதியில் வசித்து வந்தவர் ஷேக் அப்துல்லா (36). இவரும், திருச்சி, புங்கனுாரை சேர்ந்த தங்கப்பன்(58), என்பவரும் கோவையில் ஒன்றாக தங்கி கட்டட வேலைக்கு சென்றனர்.
காந்திபுரம், 9-வது தெருவில்வேலை செய்த போது, தங்கப்பன் மொபைல் போனை, ஷேக் அப்துல்லா உடைத்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதனால் முன் விரோதம் ஏற்பட்டு, 18–9–2021 அன்று மாலையில், ஷேக் அப்துல்லாவை கத்தியால் குத்தி தங்கப்பன் கொலை செய்தார்.
காட்டூர் போலீசார்,தங்கப்பனை கைது செய்தனர். இந்த வழக்கில் தங்கப்பனுக்குஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 5 ஆயிரம் விதித்து, கோவை குண்டுவெடிப்பு வழக்கு சிறப்பு கோர்ட் நீதிபதி பாலு,இன்றுதீர்ப்பு அளித்தார்.
இதில் அரசு தரப்பு வழக்கறிஞர் கார்த்திகேயன் மற்றும் காட்டூர் காவல் ஆய்வாளர் லதா அவர்கள் புலன் விசாரணை அதிகாரிஎதிரியை கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.