விரைவில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 55 ஆயிரம் ரூபாய்க்கு உயரும் என இத்தொழிலில் உள்ள வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
கோவை: தங்கத்தின் விலை சமீப காலமாக அதிகரித்து வருவது வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 41 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்துவெங்கட்ராம் கூறியதாவது:-

தங்கத்தின் விலை உயர்வுக்கு ரஷ்யா - உக்ரேன் நாடுகளுக்கிடையே இடையே நடந்துவரும் போர் முக்கிய காரணமாகும்.
ரஷ்யா நாட்டின் கரன்சி நோட்டு மதிப்பு குறைந்துள்ளது காரணமாக, அந்நாடு தங்கத்தை மிக அதிக அளவு வாங்கி குவிக்கத் துவங்கியுள்ளது. கரன்சி மதிப்பு குறையலாம், ஆனால் தங்கத்தின் மதிப்பு என்றும் குறையாது.
எனவே மிக அதிகமாகத் தங்கத்தை அந்த நாடு வாங்கி சேர்த்து வரும் காரணத்தால் உலக மார்க்கெட்டில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கோவையில் இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை 40 ஆயிரத்து 992 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எதிர்வரும் நாட்களில் தங்கத்தின் விலை குறைவதற்கு வாய்ப்பு இல்லை.
விலை மேலும் மேலும் அதிகரிக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளன. விரைவில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 55 ஆயிரம் ரூபாய்க்கு உயரும் என இத்தொழிலில் உள்ள வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
தங்கத்தின் விலை உயர்ந்து வருவதால் கோவையில் தங்க நகை விற்பனை மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவை மாவட்டத்தில் சமீப நாட்களாக விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன்(8 கிராம்) தங்கத்தின் விலை பட்டியல்:
April 7: Rs 39,888
April 8: Rs 40,040
April 10: Rs 40,344
April 11: Rs 40,512
April 12: Rs 40,632
April 13: Rs 40,992
இதுகுறித்து கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்துவெங்கட்ராம் கூறியதாவது:-
தங்கத்தின் விலை உயர்வுக்கு ரஷ்யா - உக்ரேன் நாடுகளுக்கிடையே இடையே நடந்துவரும் போர் முக்கிய காரணமாகும்.
ரஷ்யா நாட்டின் கரன்சி நோட்டு மதிப்பு குறைந்துள்ளது காரணமாக, அந்நாடு தங்கத்தை மிக அதிக அளவு வாங்கி குவிக்கத் துவங்கியுள்ளது. கரன்சி மதிப்பு குறையலாம், ஆனால் தங்கத்தின் மதிப்பு என்றும் குறையாது.
எனவே மிக அதிகமாகத் தங்கத்தை அந்த நாடு வாங்கி சேர்த்து வரும் காரணத்தால் உலக மார்க்கெட்டில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கோவையில் இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை 40 ஆயிரத்து 992 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எதிர்வரும் நாட்களில் தங்கத்தின் விலை குறைவதற்கு வாய்ப்பு இல்லை.
விலை மேலும் மேலும் அதிகரிக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளன. விரைவில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 55 ஆயிரம் ரூபாய்க்கு உயரும் என இத்தொழிலில் உள்ள வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
தங்கத்தின் விலை உயர்ந்து வருவதால் கோவையில் தங்க நகை விற்பனை மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவை மாவட்டத்தில் சமீப நாட்களாக விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன்(8 கிராம்) தங்கத்தின் விலை பட்டியல்:
April 7: Rs 39,888
April 8: Rs 40,040
April 10: Rs 40,344
April 11: Rs 40,512
April 12: Rs 40,632
April 13: Rs 40,992