கோவையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 41-ஆயிரம் ரூபாயாக உயர்ந்தது: மேலும் விலை அதிகரிக்கும் என தொழில்துறையினர் தகவல்..!

விரைவில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 55 ஆயிரம் ரூபாய்க்கு உயரும் என இத்தொழிலில் உள்ள வல்லுநர்கள் கணித்துள்ளனர்.


கோவை: தங்கத்தின் விலை சமீப காலமாக அதிகரித்து வருவது வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 41 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்துவெங்கட்ராம் கூறியதாவது:-



தங்கத்தின் விலை உயர்வுக்கு ரஷ்யா - உக்ரேன் நாடுகளுக்கிடையே இடையே நடந்துவரும் போர் முக்கிய காரணமாகும்.

ரஷ்யா நாட்டின் கரன்சி நோட்டு மதிப்பு குறைந்துள்ளது காரணமாக, அந்நாடு தங்கத்தை மிக அதிக அளவு வாங்கி குவிக்கத் துவங்கியுள்ளது. கரன்சி மதிப்பு குறையலாம், ஆனால் தங்கத்தின் மதிப்பு என்றும் குறையாது.

எனவே மிக அதிகமாகத் தங்கத்தை அந்த நாடு வாங்கி சேர்த்து வரும் காரணத்தால் உலக மார்க்கெட்டில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கோவையில் இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை 40 ஆயிரத்து 992 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எதிர்வரும் நாட்களில் தங்கத்தின் விலை குறைவதற்கு வாய்ப்பு இல்லை.

விலை மேலும் மேலும் அதிகரிக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளன. விரைவில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 55 ஆயிரம் ரூபாய்க்கு உயரும் என இத்தொழிலில் உள்ள வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

தங்கத்தின் விலை உயர்ந்து வருவதால் கோவையில் தங்க நகை விற்பனை மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவை மாவட்டத்தில் சமீப நாட்களாக விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன்(8 கிராம்) தங்கத்தின் விலை பட்டியல்:

April 7: Rs 39,888

April 8: Rs 40,040

April 10: Rs 40,344

April 11: Rs 40,512

April 12: Rs 40,632

April 13: Rs 40,992

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...