கோவை கிணத்துக்கடவில் பைக்கில் இருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு..!

தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவில் பைக்கில் இருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

கிணத்துக்கடவு அருகே உள்ள பணப்பட்டி கிழக்கு தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் விவசாயி அகிலப்பகவுண்டர் வயது ( 72), இவரது மனைவி உன்னாத்தாள் (58) கடந்த 6-ம் தேதி தனது மகன் போதன்ராஜ்வுடன் பைக்கில் சொந்த வேலை காரணமாக கிணத்துக்கடவு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்குத் திரும்பினார்கள்.

அப்போது கிணத்துக்கடவு பொள்ளாச்சி-கோவை நெடுஞ்சாலையில் கல்லாங்காட்டுபுதூர் பகுதியில் வந்தபோது குறுக்கே நடந்து வந்த நடராஜன் என்பவர் மீது மோதாமல் இருக்க போதன்ராஜ் பிரேக் போட்டதால் இருவரும் கீழே விழுந்து காயமடைந்தனர். இதில் போதன்ராஜுக்கும் காயம் ஏற்பட்டது.

ஆனால் உன்னாத்தாளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் இருவரையும் மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனளிக்காமல் உன்னாத்தாள் நேற்றிரவு இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...