கோவை தனியார் மனநல காப்பகத்தில் பாலியல் வன்கொடுமை: உரிய விசாரணை நடத்த மாதர் சங்கம் வலியுறுத்தல்..!

இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் யாராக இருந்தாலும் நியாயமான முறையில் விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாதர் சங்கம் வலியுறுத்தல்.


கோவை: கோவை மேட்டுபாளையத்தில் உள்ள தனியார் மனநல காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வாட்ச்மேனால் கர்ப்பமாகி உள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்நிலையில் மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தலையீடு செலுத்திட வேண்டும் என அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் ஏ.ராதிகா அளித்துள்ள புகாரில்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பழைய நகராட்சி கட்டிடத்தில் இயங்கி வரும் ஹெல்பிங் ஹார்ட்டி என்னும் தனியார் மனநல காப்பகம் இயங்கி வருகிறது.

இங்கு 25 க்கும் மேற்பட்ட பெண்களும், 25 க்கும் மேற்பட்ட ஆண்களும் ஒன்றாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு காப்பகத்தில் தங்கியிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கர்ப்பமுற்ற நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதாகத் தகவல் தெரிந்தது.

இதனையடுத்து மாதர் சங்கத்தின் சார்பில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தோம். எங்கள் அமைப்பின் சார்பிலும் காப்பகம் சென்று விசாரித்தோம். அங்கு காப்பகத்தில் பெண்களுக்கென்று தனி கழிவறைகள் இல்லை.

பாதுகாப்பான சூழலும் இல்லை. அச்சம்பவம் நடைபெற்ற பிறகு அங்கிருந்த ஆண்களை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எனினும் காவலாளி தேவராஜ் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் யாராக இருந்தாலும் நியாயமான முறையில் விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உரிய விசாரணை நடத்தினால் மேலும் பல குற்றவாளிகள் பிடிபட வாய்ப்புள்ளது. மேலும் தனியார் நடத்துகின்ற இந்த மனநல காப்பகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...