கோவை விமான நிலையம், காளப்பட்டி, பீளமேடு, ஹோப்ஸ், கோல்டுவின்ஸ், சிங்காநல்லூர், வரதராஜ புரம், ராமநாதபுரம், நேரு நகர், மசக்காளிபாளையம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
கோவை: கோவையில் கடந்த இரண்டு தினங்களாக, தொடர்ந்து மதிய வேலைக்கு பிறகு கோடை மழை பெய்து வருகிறது.
ஒரு சில இடங்களில் கனமழை பெய்தாலும் மாவட்டம் மற்றும் மாநகரம் முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று நள்ளிரவு வரையிலும் தொடர்ந்து மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
இந்தநிலையில், இன்று காலை முதல் மேகமூட்டமாக காணப்பட்ட போதும், வெப்பத்தின் அளவு அதிகரித்தே காணப்பட்டது. இருந்தபோதும், இன்று மதியம் 3 மணிக்குப் பிறகு கருமேகங்கள் சூழ்ந்து திடீரென கனமழை பெய்யத் தொடங்கியது.

குறிப்பாக, கோவை விமான நிலையம், காளப்பட்டி, பீளமேடு, ஹோப்ஸ், கோல்டுவின்ஸ், சிங்காநல்லூர், வரதராஜ புரம், ராமநாதபுரம், நேரு நகர், மசக்காளிபாளையம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
திடீர் மழையால், இருசக்கர வாகன ஓட்டிகளும், பிற வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு உள்ளாகினர். இருந்தபோதும், கோவையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், மழை பெய்து வருவது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு சில இடங்களில் கனமழை பெய்தாலும் மாவட்டம் மற்றும் மாநகரம் முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று நள்ளிரவு வரையிலும் தொடர்ந்து மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
இந்தநிலையில், இன்று காலை முதல் மேகமூட்டமாக காணப்பட்ட போதும், வெப்பத்தின் அளவு அதிகரித்தே காணப்பட்டது. இருந்தபோதும், இன்று மதியம் 3 மணிக்குப் பிறகு கருமேகங்கள் சூழ்ந்து திடீரென கனமழை பெய்யத் தொடங்கியது.
குறிப்பாக, கோவை விமான நிலையம், காளப்பட்டி, பீளமேடு, ஹோப்ஸ், கோல்டுவின்ஸ், சிங்காநல்லூர், வரதராஜ புரம், ராமநாதபுரம், நேரு நகர், மசக்காளிபாளையம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
திடீர் மழையால், இருசக்கர வாகன ஓட்டிகளும், பிற வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு உள்ளாகினர். இருந்தபோதும், கோவையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், மழை பெய்து வருவது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.