கோவையில் வெளுத்து வாங்கிய கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி….!

கோவை விமான நிலையம், காளப்பட்டி, பீளமேடு, ஹோப்ஸ், கோல்டுவின்ஸ், சிங்காநல்லூர், வரதராஜ புரம், ராமநாதபுரம், நேரு நகர், மசக்காளிபாளையம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.


கோவை: கோவையில் கடந்த இரண்டு தினங்களாக, தொடர்ந்து மதிய வேலைக்கு பிறகு கோடை மழை பெய்து வருகிறது.

ஒரு சில இடங்களில் கனமழை பெய்தாலும் மாவட்டம் மற்றும் மாநகரம் முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று நள்ளிரவு வரையிலும் தொடர்ந்து மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

இந்தநிலையில், இன்று காலை முதல் மேகமூட்டமாக காணப்பட்ட போதும், வெப்பத்தின் அளவு அதிகரித்தே காணப்பட்டது. இருந்தபோதும், இன்று மதியம் 3 மணிக்குப் பிறகு கருமேகங்கள் சூழ்ந்து திடீரென கனமழை பெய்யத் தொடங்கியது.



குறிப்பாக, கோவை விமான நிலையம், காளப்பட்டி, பீளமேடு, ஹோப்ஸ், கோல்டுவின்ஸ், சிங்காநல்லூர், வரதராஜ புரம், ராமநாதபுரம், நேரு நகர், மசக்காளிபாளையம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

திடீர் மழையால், இருசக்கர வாகன ஓட்டிகளும், பிற வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு உள்ளாகினர். இருந்தபோதும், கோவையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், மழை பெய்து வருவது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...