தற்போதைய பிரதமரும், நிதியமைச்சரும் பொறுப்பில் இருக்கும் வரை விலைவாசி குறையாது - கார்த்திக் சிதம்பரம் விமர்சனம்….!

பெட்ரோல் டீசல் மீதான வரியைக் குறைக்காமல் இருக்கும் வரை விலைவாசி குறையாது எனவும், தற்போதைய மத்திய அரசு மற்றும் நிதியமைச்சர், பிரதமர் இருக்கும் வரை விலைவாசி குறையாது என தெரிவித்தார்.



கோவை: தற்போதைய பிரதமரும், நிதியமைச்சரும் பொறுப்பில் இருக்கும் வரை விலைவாசி குறையாது என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.



கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கோவை வந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.



அப்போது பேசிய அவர்: இந்தியாவில் குறிப்பாகக் கர்நாடகாவில் நடைபெறும் நிகழ்வுகள் பார்க்கும்போது இந்தியாவிற்குச் சமத்துவம் மிகவும் அவசியம். மத்தியில் இருக்கும் பாஜக இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய இஸ்லாமியர்களை ஒடுக்க வேண்டும், என்பதற்கான எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர்.

குறிப்பாக பாபர் மசூதி தீர்ப்பு, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், தலாக் விவகாரம், குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட ஒவ்வொரு தருணத்திலும் இஸ்லாமிய மக்களை ஒடுக்க நினைக்கிறார்கள்.

ஹிஜாப் அணிந்து கொண்டு பள்ளிக்கு, கல்லூரிக்கு செல்லக்கூடாது தேர்வு எழுத முடியாது. இந்து கோவில்களில் பண்டிகைகள் நடைபெறும்போது ஹிந்து மக்களைச் சாராதவர்கள் கடை வைக்கக்கூடாது.

உத்திர பிரதேசத்திலும் பாஜக அரசியல் புல்டோசர் அரசாக உள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் அம்பேத்கர் பிறந்தநாளைச் சமத்துவ நாள் எனக் கூறுவதை முழுமையாக வரவேற்கிறேன் எனத் தெரிவித்தார். தற்போதைய மத்திய அரசு மற்றும் நிதியமைச்சர், பிரதமர் இருக்கும் வரை விலைவாசி குறையாது.

பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தால் மற்ற அனைத்து பொருட்களின் விலையும் உயரும், பொருளாதார சுமையைச் சாதாரண மக்கள் மத்திய அரசு சுமத்தி வருகின்றனர். அத்தியாவசிய பொருட்கள் வாங்கச் சாதாரண மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள், பெட்ரோல் டீசல் மீதான வரியைக் குறைக்காமல் இருக்கும் வரை விலைவாசி குறையாது. கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தபோதும் மத்திய அரசு விலையை குறைக்கவில்லை.

ஏற்கனவே பல்வேறு அடியை மத்திய அரசு கொடுத்துள்ளது. பணமதிப்பிழப்பு,ஜிஎஸ்டி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருக்கு நிறுவனத்திற்கு எந்த நிதியும் மத்திய அரசு கொடுக்கவில்லை. இதிலிருந்து மீண்டு வராத நிலையில் பெட்ரோல் டீசல் வரி சுமை மூலம் இந்தியாவை பாதாளத்திற்குத் தள்ளி விட்டனர். பஞ்சு விலையில் 10 சதவீத வரியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தற்போது உலகம் முழுவதும் பல்வேறு பிரச்சனைகள் சென்று கொண்டிருக்கும் நேரத்தில் வரியை குறைப்பது போன்ற செயல்களில் ஈடுபடாமல். இந்துத்துவாவை வளர்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இஸ்லாமியர்களை ஒடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருப்பதால் மற்ற பிரச்சனைகளைப் பற்றி சிந்திப்பதில்லை. புதிய அரசு மகளிர் இலவச திட்டங்களை நிறுத்தியுள்ள குறித்து கேள்விக்கு: புதிய அரசு அமைந்த பிறகு வந்த நிதியமைச்சர் ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட்டார். அதில் இருக்கும் நிதிநிலைமை குறித்தும் தெரிவித்துள்ளார்.

எல்லா நேரத்திலும் சலுகைகளை வழங்க முடியாது. இலவச திட்டங்களைச் சற்று குறைக்க வேண்டும் என்பது தான் அவர்களுக்கு வந்திருக்கும் ஆலோசனை, அதேவேளையில் கல்வி கற்கும் மகளிருக்கு நிதி வழங்க உள்ளனர். அஅரசன் முடிவு இடைக்காலத்தில் கசப்பாக இருந்தாலும், இந்த முடிவு நன்றாக இருக்கும் என்பது என கருத்து என தெரிவித்தார்.

அதே போல ஈவிகேஎஸ் இளங்கோவன் தன்னை குழந்தை என்ற கருத்தையும், அடுத்த தலைவர் என்று கூறிய இரண்டு கருத்துகளையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் அதிகம், தொண்டர்கள் குறைவு என்பது சோம்பேறித்தனமான விமர்சனம். இந்தியா முழுவதும் பாஜகவிற்கு அடுத்து 19 முதல் 20 சதவீத வாக்குகளை வைத்திருக்கும் கட்சி காங்கிரஸ்.

பாஜக பிரதான கட்சி அதற்கடுத்ததாக காங்கிரஸ் அதிக சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துள்ளோம். நாங்கள் கூட்டணி சேருமிடம் வெற்றி பெறுகிறது, இது ஆய்வுக் கருத்து அல்ல எனத் தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...