கோவை விழா: கிளாசிக் மற்றும் அயல்நாட்டு கார் சாலை விதிகள் விழிப்புணர்வு பேரணி..!

கிளாசிக் மற்றும் அயல்நாட்டு கார் சாலை விதிகள் விழிப்புணர்வு பேரணி கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் மற்றும் துணை கமிஷனர் (போக்குவரத்து) செந்தில் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.


கோவை: கோயம்புத்தூர் விழாவின் ஒரு பகுதியாக ரோட்டரி கோயம்புத்தூர் சிட்டி சார்பில் கிளாசிக் மற்றும் அயல்நாட்டு கார் ஷோ பேரணியை இன்று காஸ்மோபாலிட்டன் கிளப், ரேஸ் கோர்ஸ் நடைபெற்றது.



கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் மற்றும் துணை கமிஷனர் (போக்குவரத்து) செந்தில் குமார் கொடியசைத்து கார் பேரணியை தொடங்கி வைத்தனர். சாலை விதிகளை பின்பற்றுவதை விழிப்புணர்வாக கொண்டு இந்த பேரணி நடைபெற்றது.



ஓல்ட் கிளாசிக் மற்றும் மாடர்ன் எக்ஸோடிக்ஸ் உள்ளிட்ட 50 கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு கோவையின் முக்கிய சாலைகள் மற்றும் இடங்கள் வழியாகச் சென்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வரை சென்றது.



இந்த நிகழ்ச்சியில் மிகவும் பார்ப்பதற்கு அரிய கார்கள் காட்சிப்பட்டு இருந்ததை பொதுமக்கள் வியப்புடன் கண்டுகளித்தனர்.



இந்நிகழ்ச்சியை ரோட்டரி கோயம்புத்தூர் நகர தலைவர் செந்தில் குமார், திட்டத் தலைவர் டி.கனகராஜ், செயலாளர் ஆர்.டி.என்.கணேசன் ஆகியோர் கோயம்புத்தூர் விழா உறுப்பினர்களுடன் ஏற்பாடு செய்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...