கோவையில் மனு அளிக்க வந்த AITUC அமைப்பினர் திடீரென கண்டன முழக்கங்களை எழுப்பியதால் கைது..!

கட்டுமான தொழிலாளர்கள் சம்பந்தமாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க வந்த AITUC அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென கண்டன முழக்கங்களை எழுப்பியதால் காவல்துறையினர் கைது செய்தனர்.


கோவை: AITUC அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென கண்டன முழக்கங்களை எழுப்பியதால் காவல்துறையினர் கைது செய்தனர்.



தமிழக AITUC கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தினர் மாநில துணை பொதுச்செயலாளர் செல்வராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.

"பெண் கட்டுமான தொழிலாளர்கள் ஓய்வு பெறும் வயதை 50 வயது ஆக குறைக்க வேண்டும். திமுகவின் முந்தைய ஆட்சிக்காலத்தில் 60 வயது நிறைவடைந்த இந்த பதிவு செய்த அனைத்து தொழிலாளர்களுக்கும் போதிய ஊதியம் வழங்க வேண்டும்.

மாதம் 6,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும். இயற்கை மரணத்திற்கு ஐந்து லட்சம் ரூபாயும் விபத்தில் உயிரிழந்தார். 10 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும். குழந்தைகளின் கல்விச் செலவு முழுவதையும் வாரியம் ஏற்க வேண்டும்.



ESI மருத்துவமனையில் மருத்துவ வசதி செய்து தர வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க வந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இன்று அவர்களது கோரிக்கை பதாகைகளை ஏந்தி கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.



காவல்துறையினரிடம் உரிய அனுமதி பெறாமல் சாலையில் திடீரென முழக்கங்களை எழுப்பியதால் காவல்துறையினர் 50-க்கும் மேற்பட்ட கோவை மாவட்ட AITUC கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...