கட்டுமான தொழிலாளர்கள் சம்பந்தமாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க வந்த AITUC அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென கண்டன முழக்கங்களை எழுப்பியதால் காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவை: AITUC அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென கண்டன முழக்கங்களை எழுப்பியதால் காவல்துறையினர் கைது செய்தனர்.

தமிழக AITUC கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தினர் மாநில துணை பொதுச்செயலாளர் செல்வராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.
"பெண் கட்டுமான தொழிலாளர்கள் ஓய்வு பெறும் வயதை 50 வயது ஆக குறைக்க வேண்டும். திமுகவின் முந்தைய ஆட்சிக்காலத்தில் 60 வயது நிறைவடைந்த இந்த பதிவு செய்த அனைத்து தொழிலாளர்களுக்கும் போதிய ஊதியம் வழங்க வேண்டும்.
மாதம் 6,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும். இயற்கை மரணத்திற்கு ஐந்து லட்சம் ரூபாயும் விபத்தில் உயிரிழந்தார். 10 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும். குழந்தைகளின் கல்விச் செலவு முழுவதையும் வாரியம் ஏற்க வேண்டும்.

ESI மருத்துவமனையில் மருத்துவ வசதி செய்து தர வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க வந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இன்று அவர்களது கோரிக்கை பதாகைகளை ஏந்தி கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

காவல்துறையினரிடம் உரிய அனுமதி பெறாமல் சாலையில் திடீரென முழக்கங்களை எழுப்பியதால் காவல்துறையினர் 50-க்கும் மேற்பட்ட கோவை மாவட்ட AITUC கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக AITUC கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தினர் மாநில துணை பொதுச்செயலாளர் செல்வராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.
"பெண் கட்டுமான தொழிலாளர்கள் ஓய்வு பெறும் வயதை 50 வயது ஆக குறைக்க வேண்டும். திமுகவின் முந்தைய ஆட்சிக்காலத்தில் 60 வயது நிறைவடைந்த இந்த பதிவு செய்த அனைத்து தொழிலாளர்களுக்கும் போதிய ஊதியம் வழங்க வேண்டும்.
மாதம் 6,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும். இயற்கை மரணத்திற்கு ஐந்து லட்சம் ரூபாயும் விபத்தில் உயிரிழந்தார். 10 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும். குழந்தைகளின் கல்விச் செலவு முழுவதையும் வாரியம் ஏற்க வேண்டும்.
ESI மருத்துவமனையில் மருத்துவ வசதி செய்து தர வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க வந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இன்று அவர்களது கோரிக்கை பதாகைகளை ஏந்தி கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.
காவல்துறையினரிடம் உரிய அனுமதி பெறாமல் சாலையில் திடீரென முழக்கங்களை எழுப்பியதால் காவல்துறையினர் 50-க்கும் மேற்பட்ட கோவை மாவட்ட AITUC கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.