கோவை - பாலக்காடு நெடுஞ்சாலையில் சரக்கு வாகனம் மோதி கோர விபத்து - அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு

விபத்தில் தலை முற்றிலும் நசுங்கியதால் இறந்த நபர் குறித்து விவரங்கள் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, கட்டம் போட்ட லுங்கி மற்றும் வெள்ளை நிற சட்டை அணிந்திருக்கும் இந்த நபர் குறித்த தகவல்களை கே.ஜி. சாவடி காவல் நிலையத்தில் தெரிவிக்கலாம்.


கோவை: கோவை - பாலக்காடு நெடுஞ்சாலை, திருமலையம்பாளையம் சந்திப்பு அருகே சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் தலை நசுங்கிய நிலையில் சடலமாக கிடப்பதாக கே.ஜி சாவடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில், இறந்த நபர் நெடுஞ்சாலையில் வந்த போது அடையாளம் தெரியாத சரக்கு வாகனம் மோதியதில் அவர் உயிரிழந்திருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.



விபத்தில் தலை நசுங்கி சடலமாக மீட்கப்பட்டவர் யார்? எங்கிருந்து வந்தவர்? என்பது குறித்த விவரங்கள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், சடலமாக மீட்கப்பட்டவர் கட்டம் போட்ட லுங்கி மற்றும் வெள்ளை நிற சட்டை அணிந்திருந்ததாகவும், தலை முழுவதும் டயர் ஏறியதில் நசுங்கியதால் அடையாளம் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

எனவே, இறந்த இந்த நபர் குறித்த தகவல் ஏதேனும் கிடைத்தால் கே.ஜி சாவடி போலீசாரை அணுகலாம் என தெரிவித்துள்ள போலீசார், விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற வாகனம் குறித்து அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...