புகார் அளிக்க விடாமல் திமுக வடக்கு மண்டல தலைவர் தடுத்து மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட பெண் கோவை ஆட்சியரிடம் மனு..!

தனது நிறுவனத்தை அபகரிக்கும் நோக்கில் மாநகராட்சி 3-வது வார்டு திமுக கவுன்சிலர் கவிதா செயல்பட்டு வருவதாகவும், மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் புகார் மனு அளித்துள்ளார்.


கோவை: தனது நிறுவனத்தை அபகரிக்கும் நோக்கில் மாநகராட்சி 3-வது வார்டு திமுக கவுன்சிலர் கவிதா செயல்பட்டு வருவதாக, பாதிக்கப்பட்ட பெண் கோவை ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

கோவை உடையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா. இவர் அப்பகுதியில் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.



இந்நிலையில் தனது நிறுவனத்தை அபகரிக்கும் நோக்கில் மாநகராட்சி 3-வது வார்டு திமுக கவுன்சிலர் கவிதா செயல்பட்டு வந்ததாகவும், தனது மகளை தன்னிடமிருந்து பிரித்து கொலை செய்ய திட்டம் திட்டியதாகவும், இது குறித்து சரவணம் பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தால் புகாரளிக்க விடாமல் திமுக வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் தடுத்து தங்களை மிரட்டுவதாகவும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும் படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

இது குறித்து மஞ்சுளா கூறுகையில், கவிதா கவுன்சிலர் ஆவதற்கு முன்பு, தனது நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் தனது மகளை தன்னிடமிருந்து பிரித்து தன்னை கொலை செய்ய பல்வேறு முயற்சிகள் செய்ததாகவும், கவுன்சிலர் ஆன பின்பும் தன்னை கொலை செய்து நிறுவனத்தை அபகரிக்க பல்வேறு முயற்சிகள் செய்து வருவதாகவும், இது குறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றால் திமுக வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் புகார் அளிக்க விடாமல் இடையூறு செய்து காவல் நிலையம் முன்பே தங்களை இழிவான சொற்களால் தங்களை மிரட்டுவதாகத் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...