தனது நிறுவனத்தை அபகரிக்கும் நோக்கில் மாநகராட்சி 3-வது வார்டு திமுக கவுன்சிலர் கவிதா செயல்பட்டு வருவதாகவும், மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் புகார் மனு அளித்துள்ளார்.
கோவை: தனது நிறுவனத்தை அபகரிக்கும் நோக்கில் மாநகராட்சி 3-வது வார்டு திமுக கவுன்சிலர் கவிதா செயல்பட்டு வருவதாக, பாதிக்கப்பட்ட பெண் கோவை ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
கோவை உடையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா. இவர் அப்பகுதியில் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் தனது நிறுவனத்தை அபகரிக்கும் நோக்கில் மாநகராட்சி 3-வது வார்டு திமுக கவுன்சிலர் கவிதா செயல்பட்டு வந்ததாகவும், தனது மகளை தன்னிடமிருந்து பிரித்து கொலை செய்ய திட்டம் திட்டியதாகவும், இது குறித்து சரவணம் பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தால் புகாரளிக்க விடாமல் திமுக வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் தடுத்து தங்களை மிரட்டுவதாகவும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும் படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
இது குறித்து மஞ்சுளா கூறுகையில், கவிதா கவுன்சிலர் ஆவதற்கு முன்பு, தனது நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் தனது மகளை தன்னிடமிருந்து பிரித்து தன்னை கொலை செய்ய பல்வேறு முயற்சிகள் செய்ததாகவும், கவுன்சிலர் ஆன பின்பும் தன்னை கொலை செய்து நிறுவனத்தை அபகரிக்க பல்வேறு முயற்சிகள் செய்து வருவதாகவும், இது குறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றால் திமுக வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் புகார் அளிக்க விடாமல் இடையூறு செய்து காவல் நிலையம் முன்பே தங்களை இழிவான சொற்களால் தங்களை மிரட்டுவதாகத் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
கோவை உடையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா. இவர் அப்பகுதியில் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் தனது நிறுவனத்தை அபகரிக்கும் நோக்கில் மாநகராட்சி 3-வது வார்டு திமுக கவுன்சிலர் கவிதா செயல்பட்டு வந்ததாகவும், தனது மகளை தன்னிடமிருந்து பிரித்து கொலை செய்ய திட்டம் திட்டியதாகவும், இது குறித்து சரவணம் பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தால் புகாரளிக்க விடாமல் திமுக வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் தடுத்து தங்களை மிரட்டுவதாகவும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும் படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
இது குறித்து மஞ்சுளா கூறுகையில், கவிதா கவுன்சிலர் ஆவதற்கு முன்பு, தனது நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் தனது மகளை தன்னிடமிருந்து பிரித்து தன்னை கொலை செய்ய பல்வேறு முயற்சிகள் செய்ததாகவும், கவுன்சிலர் ஆன பின்பும் தன்னை கொலை செய்து நிறுவனத்தை அபகரிக்க பல்வேறு முயற்சிகள் செய்து வருவதாகவும், இது குறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றால் திமுக வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் புகார் அளிக்க விடாமல் இடையூறு செய்து காவல் நிலையம் முன்பே தங்களை இழிவான சொற்களால் தங்களை மிரட்டுவதாகத் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.