வெள்ளலூர் குப்பை கிடங்கில் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள், ஒரே இடத்தில் கொட்டப்படுவதால், நிலத்தடி நீர், நிலம் மாசு ஏற்படுகிறது. இதை தடுக்க தரம் பிரிக்கும் பணிகளை மேற்கொள்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
கோவை: கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் சுகாதாரக்குழு தலைவர் மாரிசெல்வன் தலைமையில் சுகாதார குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
கோவை வெள்ளலூர் குப்பை குடங்கில் கொட்டும் மழையில், கோவை மாநகராட்சி சுகாதார குழு தலைவர் மாரிசெல்வன் தலைமையில் சுகாதார குழுவினர், அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பை தரம் பிரிக்கும் பணிகள் நடந்து வரும் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, சுகாதாரக்குழு தலைவர் மாரிச்செல்வன் கூறும் போது:-
தமிழக முதல்வர் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை அறிவித்துள்ளார். நீர் நிலம் மாசு தவிர்க்க பிளாஸ்டிக் ஒழிப்பை முன்னெடுத்துள்ளார். கோவை மாநகராட்சியிலும் தூய்மையான காற்று, நீர் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு பணிகளை செய்து வருகிறோம்.
கோவை மாநகராட்சியில் பொதுமக்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனியாக பிரித்து தர வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக வெள்ளலூர் குப்பை கிடங்கில் மாமன்ற உறுப்பினர்களுடன் நேரில் ஆய்வு செய்தோம்.
பிளாஸ்டிக் ஒழிப்பு என்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம், கோவை மாநகரத்தில் மாசு இல்லாத நகராக மாற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் சுகாதார அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறோம்.
குறிப்பாக வெள்ளலூர் குப்பை கிடங்கில் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள், ஓரே இடத்தில் கொட்டப்படுவதால், நிலத்தடி நீர், நிலம் மாசு ஏற்படுகிறது. தற்போது நீர், காற்று மாசு ஏற்படாமல் எவ்வாறு தரம் பிரிக்கும் பணிகளை மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசித்துள்ளோம் என தெரிவித்தார்.