கோவை மாநகராட்சி சுகாதார குழு தலைவர் வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஆய்வு - நீர், நிலம் மாசை தடுக்க தீவிர நடவடிக்கை…!

வெள்ளலூர் குப்பை கிடங்கில் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள், ஒரே இடத்தில் கொட்டப்படுவதால், நிலத்தடி நீர், நிலம் மாசு ஏற்படுகிறது. இதை தடுக்க தரம் பிரிக்கும் பணிகளை மேற்கொள்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.



கோவை: கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் சுகாதாரக்குழு தலைவர் மாரிசெல்வன் தலைமையில் சுகாதார குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.



கோவை வெள்ளலூர் குப்பை குடங்கில் கொட்டும் மழையில், கோவை மாநகராட்சி சுகாதார குழு தலைவர் மாரிசெல்வன் தலைமையில் சுகாதார குழுவினர், அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர்.



அப்போது மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பை தரம் பிரிக்கும் பணிகள் நடந்து வரும் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, சுகாதாரக்குழு தலைவர் மாரிச்செல்வன் கூறும் போது:-

தமிழக முதல்வர் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை அறிவித்துள்ளார். நீர் நிலம் மாசு தவிர்க்க பிளாஸ்டிக் ஒழிப்பை முன்னெடுத்துள்ளார். கோவை மாநகராட்சியிலும் தூய்மையான காற்று, நீர் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு பணிகளை செய்து வருகிறோம்.

கோவை மாநகராட்சியில் பொதுமக்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனியாக பிரித்து தர வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக வெள்ளலூர் குப்பை கிடங்கில் மாமன்ற உறுப்பினர்களுடன் நேரில் ஆய்வு செய்தோம்.

பிளாஸ்டிக் ஒழிப்பு என்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம், கோவை மாநகரத்தில் மாசு இல்லாத நகராக மாற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் சுகாதார அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறோம்.

குறிப்பாக வெள்ளலூர் குப்பை கிடங்கில் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள், ஓரே இடத்தில் கொட்டப்படுவதால், நிலத்தடி நீர், நிலம் மாசு ஏற்படுகிறது. தற்போது நீர், காற்று மாசு ஏற்படாமல் எவ்வாறு தரம் பிரிக்கும் பணிகளை மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசித்துள்ளோம் என தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...