கோவை மாநகராட்சி 'விக்டோரியா ஹாலில் கூட்டம் நடப்பதே சிறப்பு': தனியாக ஒரு கட்டிடம் என்பது தேவையற்றது - கவுன்சிலர்கள்

தனியாக ஒரு கட்டிடம் என்பது தேவையற்றது என்றும், மரத்தடியில் அமர்ந்து கூட கூட்டத்தில் பங்கேற்க நாங்கள் தயார். புதிய மாமன்றம் அமைக்கும் நிதியில் மக்களுக்கு தேவையானவற்றை செய்து தரலாம் எனவும் தெரிவித்தனர்.


கோவை: கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க விக்டோரியா ஹாலில் மாமன்ற கூட்டமானது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற முதல் சாதாரண கூட்டத்தில் பேசிய ஒரு வார்டு கவுன்சிலர் தனியாக மாமன்றம் கூட்டம் நடத்த ஒரு புதிய கட்டிடம் தேவை என்ற கோரிக்கையை முன் வைத்தார்.

அவரது கோரிக்கைக்கு பதில் அளித்த கவுன்சிலர்கள், தனியாக ஒரு கட்டிடம் என்பது தேவையற்றது என்றும் கர்மவீரர் காமராஜர் போன்ற வரலாற்றுத் தலைவர்கள் வந்து சென்ற கோவை மாநகராட்சி வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் கூட்டம் நடத்துவதே சிறப்பு என்று மாற்று கருத்து தெரிவித்துள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததைத் தொடர்ந்து மாமன்ற உறுப்பினர் அவர்களது பணிகளை மேற்கொள்ள துவங்கியுள்ளனர். நேற்று மாமன்ற சாதரண முதல் கூட்டம் நடைபெற்றது.

இதில் 82-வது வார்டு மாமன்ற உறுப்பினர் முபசீரா வரிவிதிப்பு மற்றும் நிதிக் குழு தலைவராக உள்ள இவர் மாமன்ற உறுப்பினர்களுக்குப் புதிதாக மாமன்றம் அமைத்துத் தர வேண்டும் என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்கள் பலரும் வரலாற்றுச் சிறப்புமிக்க விக்டோரியா ஹாலில் தற்போது அமையப்பெற்றுள்ள மாமன்ற உறுப்பினர்களின் அனைத்து கூட்டமும் நடைபெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இதில் பேசிய மார்க்சிஸ்ட் மாமன்ற உறுப்பினர் ராம்மூர்த்தி கூறியதாவது:-

இந்த கட்டடமானது 130 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. நாட்டின் பிரதமர் இங்கு வந்துள்ளார். முதல்வராக இருந்த காலத்தில் காமராஜர் வந்துள்ளார். ஆகவே, இங்கு மாமன்ற கூட்டம் நடப்பதே சிறப்பு எனவும், புதிய கட்டிடம் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் கூறியதாவது:-

மாநகராட்சிக்கு புதிய மாமன்ற கட்டிடத்தினை குறித்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சிந்திக்கலாம் என தெரிவித்தார்.

காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் காயத்ரி கூறுகையில்:-

மரத்தடியில் அமர்ந்து கூட கூட்டத்தில் பங்கேற்க நாங்கள் தயார். புதிய மாமன்றம் அமைக்கும் நிதியில் மக்களுக்குத் தேவையானவற்றை செய்து தரலாம் எனவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...