'காது சவ்வு' கிழிவது போல ஹாரன் அடிக்கிறீர்களே... தட்டி கேட்ட பொதுமக்களுக்கு சரமாரி அடி உதை.. தறிகெட்டு ஓடும் தனியார் பேருந்துகள்..!

காது சவ்வு கிழிவது போல ஹாரன் அடிக்கிறீர்களே என்று கேட்டதற்கு உடனடியாக தனியார் பேருந்தில் இருந்து இறங்கிய நடத்துனர் மற்றும் ஓட்டுநர்கள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கேள்வி எழுப்பிய பொதுமக்களை சரமாரியாக தாக்கி உள்ளனர்.


கோவை: கோவையில் அதிக ஒலி மற்றும் அதிவேகமாக செல்லும் தனியார் பேருந்துகள்;தட்டிக் கேட்ட பொது மக்களை நடத்துனர் மற்றும் ஓட்டுநர்கள் சரமாரியாக தாக்கி உள்ளனர்.

கோவையின் முக்கிய பகுதியான காந்திபுரம் பகுதியில் 4 பேருந்து நிலையங்கள் உள்ளன. டவுன் பேருந்து நிலையம், சென்ட்ரல் பேருந்து நிலையம், திருவள்ளுவர் பேருந்து நிலையம் மற்றும் ஆம்னி பேருந்து நிலையம் உள்ளது.

இந்த நிலையில், நேற்று இரவு கோவை காந்திபுரம் டவுன் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்துகள் வரிசையாக அணிவகுத்து, பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தனர்.

அப்போது இரண்டு பயணிகள் பேருந்துக்கு முன்னால் நின்று கொண்டிருந்தன, தொடர்ந்து பயணிகளை ஏற்றுவதில் போட்டி ஏற்பட்ட தனியார் பேருந்துகள் தடை செய்யப்பட்ட அதிக ஒலி எழுப்பும் காற்றொலிப்பான்கள் (ஏர் ஹாரன்கள்) பயன்படுத்தி ஒலியை எழுப்பினர்.

பொறுத்து பொறுத்து பார்த்த பொதுமக்களில் 2 பேர் அதை தட்டிக் கேட்டுள்ளனர். காது சவ்வு கிழிவது போல ஹாரன் அடிக்கிறீர்களே என்று கேட்டதற்கு உடனடியாக தனியார் பேருந்தில் இருந்து இறங்கிய நடத்துனர் மற்றும் ஓட்டுநர்கள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கேள்வி எழுப்பிய பொதுமக்களை சரமாரியாக தாக்கத் தொடங்கினார்.

பின்னர் அங்கிருந்து புலம்பியபடி சென்ற பொதுமக்கள், தனியார் பேருந்துகளின் அராஜகம் குறித்து காந்திபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும் நடவடிக்கை ஏதும் எடுப்பதில்லை, அதிக ஒலி எழுப்பக் கூடாது என அரசு தடை விதித்தும்,கோவை காந்திபுரம் டவுன் பேருந்து நிலையத்தில் தொடர்ந்து ஏர் ஆரன்பயன்படுத்தி தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு அளித்து வருகின்றனர் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினார்.

இது போல் ஹாரன் எழுப்புவதால்,பயணிகளும் இதில் அச்சப்பட்டுஅங்கும் இங்கும் அவசரமாக ஓட வேண்டியுள்ளது. எனவே,காந்திபுரம் பேருந்து நிலையத்தில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...