மிஸ் பண்ணாதீங்க.. அப்புறம் வருத்தப்படுவீங்க.. கோவை பீளமேடு பகுதியில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம்..!

இந்த முகாமில் சரி பார்க்கப்பட்ட பட்டாக்களில் மாறுதல் செய்யப்பட்டதற்கான சான்றிதழ் இன்று மாலைக்குள் வழங்கப்படும். இன்றளவில் 300-க்கும் மேற்பட்ட பட்டா மாறுதல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 52-வது வார்டு பீளமேடு பகுதியில் பட்டா மாறுதல் முகாம் கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி தலைமையில் இன்று நடைபெற்றது.



கோவை மாநகராட்சியில் பட்டா மாறுதல் முகாம் இன்று பீளமேடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி தலைமையில் நடைபெற்று வருகின்றது.

இன்று காலை துவங்கிய இந்த முகாமானது மாலை வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமில் அரசு அதிகாரிகளான தெற்கு தாசில்தார் சரண்யா, நத்தம் நிலவரி திட்ட தாசில்தார் கல்பனா அலமேலு, துணை தாசில்தார் இளவரசி, வருவாய் ஆய்வாளர் ராணி மற்றும் வி.ஓ. (கிராமத்து அதிகாரி) மூவர் முன்னிலையில் பட்டாக்கள் சரி பார்க்கப்படுகின்றது.



இந்த முகாமில் சரி பார்க்கப்பட்ட பட்டாக்களில்மாறுதல் செய்யப்பட்டதற்கான சான்றிதழ் இன்று மாலைக்குள் வழங்கப்படும். இன்றளவில் 300க்கும் மேற்பட்ட பட்டா மாறுதல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து முகாமிலிருந்த பட்டாவில் பெயர் மாறுதல் பெற்ற நபர் கூறியதாவது:-

பீளமேடு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பல நாட்கள் தங்கள் பட்டாவில் பெயர் மாறுதல் தொடர்பாக அலுவலர்களை தொடர்பு கொள்கையில் அவர்கள் காலதாமதம் செய்வதாகவும். தற்போது இந்த முகாமின் மூலம் பெரிதும் அனைவரும் பயனடைந்து உள்ளதாகவும் தெரிவித்தார்.



இதுகுறித்து முகாமினை மேற்பார்வை செய்யும் தெற்கு தாசில்தார் சரண்யா கூறியதாவது;

இந்த முகாமானது கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில், கோவை கிழக்கு மண்டல தலைவரும் 52-வது மாமன்ற உறுப்பினருமான இலக்குமி இளஞ்செல்வி தலைமையில் பட்டா மாறுதல் முகாம் இன்று நடைபெற்று வருகின்றது. இதில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான மாறுதல் பெற்ற பட்டாகான சான்றிதழ் மாலை வழங்கப்படும் என தெரிவித்தார்.

இதுகுறித்து முகாமினை தலைமை தாங்கிய இலக்குமி இளஞ்செல்வி கூறியதாவது:-



இந்த முகாம் மக்களுக்கான முகாம், இதில் 52-வது சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து மக்களும் தங்கள் பட்டா பெயர் மாற்றத்தில் காலதாமதமாவதைக் குறிப்பிட்டதை தொடர்ந்து. கோவை மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று மக்களுக்கான இந்த பட்டா மாறுதல் முகாமினை அமைத்துள்ளோம் என தெரிவித்தார். மேலும், இன்று மாலை பட்டா மாறுதலுக்காக விண்ணப்பித்த அனைவருக்கும் சான்றிதழ் மாலை வழங்கப்படும் என தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...