வால்பாறையில் தென் இந்திய தோட்ட அலுவலர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் 30- சதவீத சம்பள உயர்வு வேண்டும் என வலியுறுத்தல்..!

தென்னிந்திய தேயிலை தோட்ட அலுவலர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் 15- தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


கோவை: தென்னிந்தியத் தேயிலைத் தோட்ட அலுவலர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம் கோவை மாவட்டம்வால்பாறையை அருகே உள்ளமுடீஸ் தோட்ட அலுவலர்கள் மன மகிழ் மன்ற அரங்கில் நடைபெற்றது.

சங்கத்தின் தென் இந்தியத் தலைவர்கள் சுனில்குமார், ரிபெல்லோ, செயல் தலைவர் தாமஸ், பொதுச்செயலாளர் சிவானந்த சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மூணாறு, ஹைவேவிஸ், கூடலூர் ஆகிய பகுதிகளில்தோட்ட தொழிலாளர்கள் கருத்துக் கேட்பு முடிவுற்ற நிலையில் தோட்ட அலுவலர்களுக்குச் சம்பள உயர்வு குறித்து கருத்துக்கள் கேட்கப்பட்டது.



இதில் தொழில்லார்களுக்கும் நிர்வாக தலைமைக்கும் பாலமாக இருக்கும் அலுவலகர்களுக்கு 2021-ல் 12% சதவீதம் சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்றும், எதிர்வரும் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை குன்னூர் உப்பாசியில் நடைபெற உள்ள நிலையில், 30-சதவீதம் உயர்த்தி வழங்கத் தொழிற்சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும், அலுவலர்கள் குடியிருப்புகள் பராமரிப்பு செய்யவேண்டும், ஒரு நிர்வாகத்தில் பணியாற்றி, மற்றொரு நிர்வாகத்தில் புதிதாக பணிக்குச் சேர்பவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கி பணியில் சேர்ப்பதால், தொடர்ந்து நீண்ட நாட்களாக பணியாற்றுபவர்கள் பதவி உயர்வு, மற்றும்பணப்பலன்கள் பாதிக்கப்படுவதால் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், சம்பள கணக்கு பட்டியல் உடனடியாக வழங்க வேண்டும், எரிவாயு சிலிண்டர் எஸ்டேட்களுக்கு வீடு வந்து சேர்வதற்கு ரூ.1100-வரை செலவாகிறது.

ஆனால் நிர்வாகம் ரூ.100 மட்டுமே வழங்குவதை உயர்த்தி கொடுக்க வேண்டும் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் வால்பாறை பகுதியில் இயங்கி வரும் தோட்ட நிர்வாகங்கள் பணியாற்றிவரும் அலுவலர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...