கோவையில் சிலிண்டருக்கு ‘பாடை’ கட்டிய இளைஞர் காங்கிரஸ்; கேஸ் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு..!

பாஜக அரசு நாடு முழுவதும் உள்ள மக்களை வஞ்சிக்கும் வகையில் எதற்கெடுத்தாலும் விலை ஏற்றம் செய்வதாக இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனின் தெரிவித்தார்.


கோவை: பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து இளைஞர் காங்கிரஸினர் சிலிண்டருக்கு பாடை கட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வு காரணமாக மத்திய அரசைக் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு, இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.



இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கேஸ் சிலிண்டருக்கு பாடைகட்டி நூதன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் கண்டன உரையாற்றிய லெனின், பாஜக அரசு நாடு முழுவதும் உள்ள மக்களை வஞ்சிக்கும் வகையில் எதற்கெடுத்தாலும் விலை ஏற்றம் செய்வதாக தெரிவித்தார்.

தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வாக்கு கேட்டு வரும்போது மட்டும் தான் இந்த தொகுதிக்கு வந்ததாகவும் அதன் பிறகு, 10 மாத காலங்களாக அவர் இங்கு வருவதில்லை என இப்பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர் என கூறினார்.

மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகத்தில் இந்தி திணிப்பைச் செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்த அவர் தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்க முடியாது என்றும், தமிழ்நாட்டில் பாஜக என்றும் வராது எனவும் தெரிவித்தார்.



இளைஞர் காங்கிரஸ் அந்த அமைப்பினர் முதல் போராட்டத்தைக் கோவையில் துவக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...