சம்பவம் நடைபெற்ற இடத்தில் அதிகளவு வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாலும், இறந்தவர் சட்டையில் பான்மசாலா இருந்ததால் இறந்தவர் வடமாநில தொழிலாளரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை.
கோவை: கோவை எட்டிமடை அருகே உள்ள சேனாதிபதி பள்ளம் என்ற இடத்தில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை எட்டிமடை அருகே உள்ள தனியார் பிளாஸ்டிக் கம்பெனியின் பின்புறம்,சேனாதிபதி பள்ளம் என்ற இடத்தில்அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக கே.ஜி சாவடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு சென்ற போலீசார், மரத்தில் அமர்ந்தவாறு, தூக்கு போட்டு, அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சடலமாக மீட்கப்பட்ட நபர் யார்? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அங்கு அதிகளவு வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாலும், இறந்தவர் சட்டையில் பான்மசாலா இருந்ததால் இறந்தவர் வடமாநில தொழிலாளரா?என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, தடவியல் நிபுணர்கள் அங்கு இருந்த தடயங்களை பதிவு செய்தனர்.
கோவை எட்டிமடை அருகே உள்ள தனியார் பிளாஸ்டிக் கம்பெனியின் பின்புறம்,சேனாதிபதி பள்ளம் என்ற இடத்தில்அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக கே.ஜி சாவடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு சென்ற போலீசார், மரத்தில் அமர்ந்தவாறு, தூக்கு போட்டு, அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சடலமாக மீட்கப்பட்ட நபர் யார்? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அங்கு அதிகளவு வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாலும், இறந்தவர் சட்டையில் பான்மசாலா இருந்ததால் இறந்தவர் வடமாநில தொழிலாளரா?என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, தடவியல் நிபுணர்கள் அங்கு இருந்த தடயங்களை பதிவு செய்தனர்.