மொபைல் போன் மூலம் முன்பதிவற்ற பயணச்சீட்டுக்களை பெற “UTSONMOBILE” செயலி தெற்கு ரயில்வே அறிமுகம்


ரயில் பயணிகளுக்கு உதவும் பொருட்டு தெற்கு ரயில்வே மொபைல் மூலம் முன்பதிவற்ற பயணச்சீட்டு பதிவு செய்யும் “UTSONMOBILE” செயலியை (app) தற்போது இதர இடங்களில் உள்ள பயணிகளும் பயன்படுத்தும் பொருட்டு சில மாறுதல்களுடன் அறிமுகம் செய்துள்ளது. 

இதன் படி, பயணிகள் தங்கள் மொபைல் போனில் “UTSONMOBILE” செயலியை (app) நிறுவி, தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ள சேலம் கோட்ட ரயில் நிலையங்களான சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, மேட்டுப்பாளையம், கரூர், சேலம் டவுன், ஆத்தூர், சின்ன சேலம் ரயில் நிலையங்களில் இருந்து பயணம் செய்வதற்கான தங்களது முன்பதிவற்ற பயணச்சீட்டுகளை தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு மொபைல் போன் மூலம் முன்பதிவற்ற பயணச்சீட்டுக்களை பெற, கீழ்க்கண்டவாறு செய்யவும்:

  • தங்களது ஆண்ட்ராய்டு அல்லது விண்டோஸ் மொபைலில் “UTSONMOBILE” செயலியை (app) பதிவிறக்கம் செய்து நிறுவி, பின்னர் தங்களது மொபைல் எண்ணை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.
  • குறைந்த பட்சம் 100 ரூபாய்க்கு ரயில்வே வாலட் (R-wallet-Railway Wallet)  மூலம் ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும்.
  • மேற்கண்ட ரயில்நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்கள் மூலம் தங்களது மொபைல் எண் மற்றும் பயணச்சீட்டு பதிவு எண்ணை பதிவு செய்து பயணச்சீட்டை பெற்றுக் கொள்ள வேண்டும்.
  • பிரிண்ட் செய்யப்பட்ட பயணச்சீட்டு இல்லாமல் பயணிகள் ரயில்களில் பயணிக்க இயலாது.


பயணிகளுக்கு மேற்கண்டவாறு தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்கள் மூலம் முன்பதிவற்ற பயணச்சீட்டுகளை பெறுவதில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால், அவர்கள் அந்த ரயில்நிலையங்களில் உள்ள முன்பதிவற்ற பயணச்சீட்டு அலுவலகத்தையோ, www.utsonmobileindrail.gov.in என்ற இணையதளத்தையோ, அல்லது பயணிகள் உதவி எண்: 044-25351621ஐ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Newsletter

மூலப்பொருள் விலை உயர்வால் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயந்திர கட்டணம் உயர்த்த 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் முடிவு

கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், Job Work நிறுவனங்கள் CNC,...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆசையில் சிக்கும் இளைஞர்கள்: கோவை போலீசார் எச்சரிக்கை

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்போடியாவில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தென்கிழக்கு ஆச...

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...