கோவை ஈச்சனாரி விநாயகர் கோயில் நிர்வாக செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் சேகர் பாபு கேட்டறிந்தார். பின்னர், கோவில் வளாகத்தில் உள்ள தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்து, சாமி தரிசனம் செய்தார்.
கோவை: கோவை பொள்ளாச்சி ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோவிலில் இன்றுஇந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

அதன்பின்னர், கோவை ஈச்சனாரி விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன் பின்னர், ஈச்சனாரி கோவில் அதிகாரிகளிடம், கோயில் நிர்வாக செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், கோவில் வளாகத்தில் உள்ள தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்து, சாமி தரிசனம் செய்தார்.

அப்போது, அவருடன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் குமர குருவேலன் IAS, மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையாளர் செந்தில் வளவன் மற்றும் கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதையடுத்து அவர் விமானம் மூலம் சென்னை கிளம்பிச் சொன்றார்.
அதன்பின்னர், கோவை ஈச்சனாரி விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன் பின்னர், ஈச்சனாரி கோவில் அதிகாரிகளிடம், கோயில் நிர்வாக செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், கோவில் வளாகத்தில் உள்ள தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்து, சாமி தரிசனம் செய்தார்.
அப்போது, அவருடன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் குமர குருவேலன் IAS, மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையாளர் செந்தில் வளவன் மற்றும் கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதையடுத்து அவர் விமானம் மூலம் சென்னை கிளம்பிச் சொன்றார்.