கோவை காவலர் பயிற்சி பள்ளி மற்றும் காவல் நிலையங்களில் காவல் ஆணையாளர் பிரதீப்குமார் ஆய்வு…!

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் நடைபெற்ற காவலர் பயிற்சி பள்ளி மற்றும் காவல் நிலையங்களைத் தூய்மை செய்யும் பணிகளை காவல் ஆணையாளர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.


கோவை: தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மற்றும் காவல் நிலையங்களைத் தூய்மை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாகக் கோவை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் காவலர் பயிற்சி பள்ளி வளாகம் ஆகியவை சீரமைப்பு மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றது.



இதனைக் கோவை மாநகர காவல் ஆணையாளர் பிரதீப்குமார் IPS.நேரில் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக காவலர் பயிற்சிப் பள்ளியில் உள்ள மருத்துவமனை, மைதானம், பழைய கட்டிடங்கள் குடியிருப்பு ஆகியவற்றை நேரில் ஆய்வு மேற்கொண்டு, என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்படுகிறது, என்பது குறித்தும் கேட்டறிந்தார்.



அதனைத் தொடர்ந்து மாநகரில் உள்ள ஒரு சில காவல் நிலையங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனிடையே, காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் ஆயுதப்படை போலீசாரிடம் கலந்துரையாடல் மேற்கொண்டார்.



அப்போது ஆயுதப்படை வீரர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். பாதுகாப்புப் பணியின்போது என்னென்ன செய்யவேண்டும் என்பது குறித்தெல்லாம் விளக்கம் அளித்தார்.

இதையடுத்து, காந்திபுரம் பகுதியில் உள்ள காவலர் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதேபோல் மாநகர போலீஸ் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், அந்தந்த காவல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...