தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் நடைபெற்ற காவலர் பயிற்சி பள்ளி மற்றும் காவல் நிலையங்களைத் தூய்மை செய்யும் பணிகளை காவல் ஆணையாளர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.
கோவை: தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மற்றும் காவல் நிலையங்களைத் தூய்மை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாகக் கோவை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் காவலர் பயிற்சி பள்ளி வளாகம் ஆகியவை சீரமைப்பு மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றது.

இதனைக் கோவை மாநகர காவல் ஆணையாளர் பிரதீப்குமார் IPS.நேரில் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக காவலர் பயிற்சிப் பள்ளியில் உள்ள மருத்துவமனை, மைதானம், பழைய கட்டிடங்கள் குடியிருப்பு ஆகியவற்றை நேரில் ஆய்வு மேற்கொண்டு, என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்படுகிறது, என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து மாநகரில் உள்ள ஒரு சில காவல் நிலையங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனிடையே, காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் ஆயுதப்படை போலீசாரிடம் கலந்துரையாடல் மேற்கொண்டார்.

அப்போது ஆயுதப்படை வீரர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். பாதுகாப்புப் பணியின்போது என்னென்ன செய்யவேண்டும் என்பது குறித்தெல்லாம் விளக்கம் அளித்தார்.
இதையடுத்து, காந்திபுரம் பகுதியில் உள்ள காவலர் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதேபோல் மாநகர போலீஸ் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், அந்தந்த காவல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன் ஒரு பகுதியாகக் கோவை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் காவலர் பயிற்சி பள்ளி வளாகம் ஆகியவை சீரமைப்பு மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றது.
இதனைக் கோவை மாநகர காவல் ஆணையாளர் பிரதீப்குமார் IPS.நேரில் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக காவலர் பயிற்சிப் பள்ளியில் உள்ள மருத்துவமனை, மைதானம், பழைய கட்டிடங்கள் குடியிருப்பு ஆகியவற்றை நேரில் ஆய்வு மேற்கொண்டு, என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்படுகிறது, என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து மாநகரில் உள்ள ஒரு சில காவல் நிலையங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனிடையே, காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் ஆயுதப்படை போலீசாரிடம் கலந்துரையாடல் மேற்கொண்டார்.
அப்போது ஆயுதப்படை வீரர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். பாதுகாப்புப் பணியின்போது என்னென்ன செய்யவேண்டும் என்பது குறித்தெல்லாம் விளக்கம் அளித்தார்.
இதையடுத்து, காந்திபுரம் பகுதியில் உள்ள காவலர் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதேபோல் மாநகர போலீஸ் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், அந்தந்த காவல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.