2-ஆண்டுகளுக்கு பிறகு களைகட்டிய 'கோவை விழா' : "ஆர்ட் ஸ்ட்ரீட்" நிகழ்வு துவக்கம்..!

விழாவின் முதல் நிகழ்ச்சியாக ரேஸ்கோர்ஸில் உள்ள நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள "ஆர்ட் ஸ்ட்ரீட்" நிகழ்வை கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் துவக்கி வைத்தனர்.



கோவை: கோவை விழாவின் முக்கிய நிகழ்வான "ஆர்ட் ஸ்ட்ரீட்" நிகழ்வை கோவை மாவட்ட ஆட்சியர்சமீரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.



கோலாகலமாக துவங்கியது கோவை விழா 2-ஆண்டுகளுக்கு இடைவெளிக்குப் பிறகு கோவை விழா நடைபெறும் நிலையில், கலைப்படைப்புகளின் கண்காட்சியுடன் இன்று விழா துவக்கி வைக்கப்பட்டுள்ளது.



கோவையின் பெருமைகளைப் பறைசாற்றும் வகையிலும், கோவை மக்களிடையே கோவையின் பெருமைகளை எடுத்துரைக்கும் வகையிலும் ஆண்டுதோறும் கோவை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக இவ்விழா நடைபெறாத நிலையில் இவ்வாண்டிற்கான விழா ஏப்ரல் 9 ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதையொட்டி கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த கஸ்மோபாலிட்டன் கிளப் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, ஆகியோர் நிகழ்வுகளைத் துவக்கி வைத்தனர். விழாவின் முதல் நிகழ்ச்சியாக ரேஸ்கோர்ஸில் உள்ள நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள "ஸ்ட்ரீட் ஆர்ட்"நிகழ்வை துவக்கி வைக்கப்பட்டது.



இந்த "ஆர்ட் ஸ்ட்ரீட்" நிகழ்வில் 75 கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இரண்டு நாட்களுக்குச் சித்திரம் வரைவதற்கான பயிற்சிகள் வழங்கப்படுவதோடு, கலைப்படைப்புகளும் விற்பனை செய்யப்படுகிறது. கோவை விழாவினை மக்கள் சிறப்பிக்கும் வகையில் “இண்டராக்டிவ் இஸ்டலேஸன்” ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இண்டராக்டிவ் இஸ்டலேஸன் என்பது தேவையற்ற நெகிழிகளில் வண்ணம் பூசப்பட்டு அதனைக் கலைப்படைப்பாக மாற்றும் வகையில் மக்களின் பார்வைக்கு அமைக்கப்பட்டுள்ளது.



மேலும், 14,000 விரல் ரேகைகளைக்கொண்டு உலக சாதனையும் நிகழ்த்தப்படுகின்றது. இதைத்தொடர்ந்து கோவை வாலாங்குளம் குளக்கரையில் இன்று மாலை லேசர் ஷோ ஒளிக்கண்காட்சி துவக்கி வைக்கப்படுகிறது. இதே போல் வருகிற 17ம் தேதி வரை பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.











Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...