சொத்தை விற்று தான், சொத்து வரியை கட்ட வேண்டும் போல - கோவையில் திமுக அரசை கண்டித்து பாஜக போராட்டம்

திமுக "கொலுசு" பார்ட்டி; உதயசூரியன் சின்னத்தை "கொலுசு" சின்னமாக மாற்றி கொள்ளலாம் என்று கோவையில் பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சாடினார்.



கோவை: தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து, தமிழகம் முழுவதும் இன்று பாஜக சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.



அதன் ஒரு பகுதியாக, கோவை காந்திபார்க் பகுதியில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



முன்னாள் எம்பி சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டு "சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும், சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்" ஆகிய பதாதைகளை ஏந்தி கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.



ஆர்பாட்டத்தின் போது, செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர், சி.பி ராதாகிருஷ்ணன், "சொல்வதை செய்வோம், என்று கூறி ஆட்சிக்கு வந்து விட்டு சொல்லாததை எல்லாம் செய்பவர்கள் தான் திமுகவினர். சொத்தையே விற்று கட்டுவது, போல் சொத்து வரியை உயர்த்தி உள்ளதாகத் குற்றம் சாட்டினர்.



அதிமுகவினர் மத்திய அரசிடமிருந்து தேவையானவற்றை பெரும் போது, அடிமை அரசு என கூறிய திமுக, தற்போது அனைத்திற்கும் டெல்லியை எதிர்பார்த்து கொண்டிருப்பதாகவும், கையாளாகாத அரசு ஆட்சி பொறுப்பில் உள்ளதாகவும் கூறினார்.

காமராஜருக்கு சுவிட்ஸ் வங்கியில் கணக்கு உள்ளதாக கூறி வந்தவர்கள் தான் திமுகவினர். திமுக பெற்றுள்ள கடைசி வெற்றி இந்த வெற்றி தான் என்றும் திமுக கட்சியின் பெயரை கொலுசு பார்ட்டி என்றும் அவர்களது உதயசூரியன் சின்னத்தை கொலுசு சின்னமாக மாற்றி வைத்துக் கொள்ளலாம் என்று சாடினார்.



திமுக அரசு மத்திய அரசுதான் சொத்து வரியை உயர்த்தியதற்கு காரணம் என்று கூறினால், அதற்கான ஆவணங்களை காண்பிக்குமாறு தெரிவித்த அவர், திமுகவினருக்கு பக்கவாத்தியங்கள் மீதான நம்பிக்கை தான் அதிகம் என பாலகிருஷ்ணன், திருமாவளவன், வைகோ ஆகியவர்களை சுட்டிக்காட்டினார்.

பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தேர்தல் வாக்குறுதிகள் சொல்லாமலேயே, பெட்ரோல் டீசல் விலையை குறைத்தது மத்திய அரசு தான் என்றும் ஆனால், திமுக அரசு கூறியதை சரிவர செய்யவில்லை எனவும் வேதனையோடு பெட்ரோல் விலையை உயர்த்துகின்ற சூழ்நிலையில் மத்திய அரசு உள்ளதாகவும் தெரிவித்தார்.

ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இந்தியாவிற்கு வரும் பொழுது பெட்ரோல் விலை குறையும் எனவும் தெரிவித்தார். போர் சூழலின்

காரணத்தால் விலை உயர்ந்து கொண்டே இருக்கும் சூழலை, இனி குறைந்து கொண்டே வரும் சூழலாக மாற்றுவோம் எனவும் தெரிவித்தார்."

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...