மாநகராட்சி 22-வது வார்டில் கவுன்சிலர் கோவை பாபு ஆய்வு..!

பூங்காக்கள், நடுநிலை பள்ளிகளில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக மாநகராட்சியின் துறைரீதியான அதிகாரிகளை அழைத்து வந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாநகராட்சி 22-வது வார்டில் உள்ள பூங்காக்கள், நடுநிலை பள்ளிகளில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக கவுன்சிலர் கோவை பாபு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி 22-வது வார்டுக்குட்பட்ட எஸ்.ஆர் கார்டன், கோ-ஆப்ரேட்டிவ் காலனி பகுதிகளில் உள்ள பூங்காக்கள் மற்றும் நடுநிலைப் பள்ளிக்கு சொந்தமான இடங்களில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வது மற்றும் குடிநீர் தொட்டி நூலக சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் குறித்து கவுன்சிலர் கோவை பாபு, மாநகராட்சியின் துறைரீதியான அதிகாரிகளை அழைத்து வந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின்போது பூங்கா மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. கடந்த பத்தாண்டுகளாக அதிமுக ஆட்சி காலத்தில் போதுமான வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படாத நிலையில் கோவை மாநகராட்சி 22வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பூங்காக்கள் மற்றும் மாநகராட்சி பள்ளிகளின் வளர்ச்சிக்கு திமுக ஆட்சியில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இன்று நடந்த ஆய்வின்போது 22-வது வட்டக்கழக செயலாளர் செல்வராஜ் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக கட்சியினர் உடன் இருந்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...