சொத்து வரி உயர்வை பாதியாக குறைக்க கோரி மதிமுக மாவட்ட நிர்வாகிகள்‌ கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..!‌

உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரியை பொதுமக்களின்‌ நலன்‌ கருதி சரிபாதியாக குறைக்க வேண்டுமென இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


கோவை: கோவை மாநகர்‌ மாவட்ட நிர்வாகிகள்‌ கூட்டம்‌ 07.04.2022ம்‌ நாள்‌ வியாழக்கிழமை மாலை 6.00 மணியளவில்‌ கோவை சித்தாபுதார்‌, ம.தி.மு.க. மாவட்ட தலைமை அலுவலகத்தில்‌, மாநில தேர்தல்‌ பணி துணைச்‌ செயலாளர்‌ அ.சேதுபதி தலைமையில்‌ நடைபெற்றது.

கூட்டத்தில்‌ மாவட்டச் செயலாளர்‌ ஆர்‌.ஆர்‌.மோகன்‌ குமார்‌ சிறப்புரை ஆற்றினார்‌.

இக்கூட்டத்தில்‌ கலந்து கொண்டவர்கள்‌:-

உயர்நிலைக்குழு உறுப்பினர்‌ ஆடிட்டர்‌ அர்ஜுன்ராஜ்‌, மாவட்ட பொருளாளர்‌ சூரி நந்தகோபால்‌, மாவட்ட துணைச்‌ செயலாளர்கள்‌ கணபதி செல்வராசு, ஆர்‌. சற்குணம்‌, எஸ்‌. துயமணி, பகுதி செயலாளர்கள் எஸ்‌.பி. வெள்ளிங்கிரி, ௧. தங்கவேல்‌, பொ.சு. முருகேசன்‌, மு. ராமநாதன்‌, எல்‌.லூயீஸ்‌, கோட்டை அக்கீம்‌, கே. பழனிச்சாமி, ச.ப. விசுவராஜ்‌, வெ.சு. சம்பத்‌, குனிசை சண்முகம்‌, அப்துல்பாரி, மாலிக்பாய்‌ தீர்மானக்குழு உறுப்பினர்‌: மு. கிருஷ்ணசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள்‌ பேங்க்‌ குமாரசாமி, பெ. முருகேசன்‌, கூ. விஜயகுமார்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌ சித்ரா வெள்ளியங்கிரி, சித்ரா தங்கவேல்‌, அன்பு (௭) தர்மராஜ்‌ பொதுக்குழு உறுப்பினர்கள்‌ பயனியர்‌ தியாகு, மார்க்கெட்‌ செல்வம்‌, சாகுல்‌ அமீது, அணிகளின்‌ அமைப்பாளர்கள்‌ ஜி.பி. அருள்‌, பாபுமுருகன்‌, தமிழ்‌ முடி உள்ளிட்டோர்‌ கலந்து கொண்டனர்‌.

இக்கூட்டத்தில்‌ நிறைவேற்றப்பட்ட‌ தீர்மானம்‌:-

தமிழக அரசு சொத்துவரியை (150%) நூற்றி ஐம்பது சதவீதம்‌ வரை உயர்த்தி உள்ளது. இதனால்‌ அனைத்து தரப்பு மக்களும்‌ கடுமையாகப் பாதிப்பு அடைவார்கள்‌.

கடந்த 2 வருடங்களாக தொழில்துறை கடமையான நெருக்கடிக்கும்‌ ஆளாகி உள்ளது. தொழிலாளிகள்‌ வேலை இழப்பிற்கு ஆளாகி உள்ளார்கள்‌. வியாபாரிகள்‌ கடுமையான வீழ்ச்சி கண்டுள்ளனர்‌.

மக்கள்‌ பொருளாதார நெருக்கடியால்‌ தவித்து வருகின்றனர்‌. இந்த நிலையில்‌ சொத்து வரி உயர்வால்‌ வீட்டு வாடகை, கடை வாடகை, சிறு, குறு, நடுத்தர தொழில்‌ செய்யும்‌ கட்டிடங்களின்‌ வாடகை உயர்த்தப்படும்‌.

இதனால்‌ அனைவரும்‌ கடுமையான பாதிப்புக்குள்ளவார்கள்‌. எனவே உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரியை பொதுமக்களின்‌ நலன்‌ கருதி சரிபாதியாக குறைக்க வேண்டுமென இக்கூட்டத்தில் வலியுறுத்திக்‌ கேட்டுக்‌கொள்ளப்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...