தற்போது பூங்காவில் உள்ள தேவையற்ற செடி கொடிகள், புதர்களை அகற்றுதல், தேங்கிய குப்பைகள் மற்றும் களைச்செடிகள் அகற்றி சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.16-க்குட்பட்ட கவுண்டம்பாளையம் வ.ஊ.சி.நகர் உலக தமிழ் செம்மொழி பூங்காவில் சிறப்பு தூய்மைப்பணிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் இன்று (08.04.2022) தொடங்கி வைத்து, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.16க்குட்பட்ட கவுண்டம்பாளையம் வ.ஊ.சி.நகர் உலக தமிழ் செம்மொழி பூங்கா நீண்ட நாட்களாக பராமரிப்பின்றி இருந்தது, தற்போது பூங்காவில் உள்ள தேவையற்ற செடி கொடிகள், புதர்களை அகற்றுதல், தேங்கிய குப்பைகள் மற்றும் களைச்செடிகள் அகற்றி சுத்தம் செய்யப்படுகிறது.

மேலும், மாநகராட்சியின் 100-வார்டுகளுக்குட்பட்ட பயன்பாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சி பூங்காக்களிலும் சிறப்பு தூய்மைப்பணிகளை மேற்கொள்ளப்படவேண்டும். அதன் பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என மேயர் கல்பனா ஆனந்தகுமார், சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, மாநகராட்சி துணை ஆணையாளார் மோ.ஷா்மிளா, மேற்கு மண்டல குழு தலைவர் கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, 16-வது வார்டு மாமன்ற உறுப்பினா் தமிழ்செல்வன், 44-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர்.காயத்திரி, மேற்கு மண்டல் உதவி ஆணையாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா மண்டல சுகாதார அலுவலா் பரமசிவம், சுகாதார ஆய்வாளா் சந்திரசேகர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் உடனிருந்தனர்.
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.16க்குட்பட்ட கவுண்டம்பாளையம் வ.ஊ.சி.நகர் உலக தமிழ் செம்மொழி பூங்கா நீண்ட நாட்களாக பராமரிப்பின்றி இருந்தது, தற்போது பூங்காவில் உள்ள தேவையற்ற செடி கொடிகள், புதர்களை அகற்றுதல், தேங்கிய குப்பைகள் மற்றும் களைச்செடிகள் அகற்றி சுத்தம் செய்யப்படுகிறது.
மேலும், மாநகராட்சியின் 100-வார்டுகளுக்குட்பட்ட பயன்பாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சி பூங்காக்களிலும் சிறப்பு தூய்மைப்பணிகளை மேற்கொள்ளப்படவேண்டும். அதன் பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என மேயர் கல்பனா ஆனந்தகுமார், சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, மாநகராட்சி துணை ஆணையாளார் மோ.ஷா்மிளா, மேற்கு மண்டல குழு தலைவர் கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, 16-வது வார்டு மாமன்ற உறுப்பினா் தமிழ்செல்வன், 44-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர்.காயத்திரி, மேற்கு மண்டல் உதவி ஆணையாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா மண்டல சுகாதார அலுவலா் பரமசிவம், சுகாதார ஆய்வாளா் சந்திரசேகர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் உடனிருந்தனர்.