அண்ணா, கலைஞர் வேடத்துடன் வந்து மேடை நடன கலைஞர்கள் கோவை மாவட்ட காவல் ஆணையரிடம் மனு..!

பிற மாவட்டங்களில் அனுமதி வழங்கப்பட்ட போதிலும் கோவை மாவட்டத்தில் மட்டும் அனுமதி வழங்கப்படுவதில்லை என வருத்தம் தெரிவித்தனர்.



கோவை: கோவை மாவட்டத்தில் மட்டும் கோவில் திருவிழாக்களில் நாடகம் போடவும், மேடை நிகழ்ச்சிகள் நடத்தவும், அனுமதி வேண்டி அண்ணா மற்றும் கலைஞர் வேடமணிந்து மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நாடக கலைஞர்கள் மனு அளித்தனர்.



தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மேடை நடன கலைஞர் சங்கத்தினர் பேரறிஞர் அண்ணா மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆகியோர் வேடம் அணிந்து "கோவையில் பல்வேறு இடங்களில் மேடை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கப்படுவதில்லை எனவும், கோவில் விழாக்களுக்கும் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கப்படுவதில்லை எனவும் இதற்குக் காவல் ஆணையர் தகுந்த நடவடிக்கை எடுத்து அனுமதி வழங்க வேண்டி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



இதுகுறித்துப் பேசிய தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மேடை நடன கலைஞர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அஜித் ராஜா அரசு அங்கீகாரம் பெற்ற சுமார் 8000 மேற்பட்ட மேடை நடன கலைஞர்கள் உறுப்பினர்களாக எங்கள் சங்கத்தில் உள்ளனர் என்றும் இதுவரை எங்கள் சங்கம் கண்ணியமான முறையில் கோவில் திருவிழாக்கள் மற்றும் மேடைகளில் நாங்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக covid-19 வைரஸ் தொற்று காரணமாக மிகுந்த வறுமைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் குழந்தைகளின் கல்வி செலவுக்குக் கூட பணம் இல்லாமல் மிகுந்த சிரமத்திலிருந்து வரும் இந்த நிலையில் தற்போது தமிழக அரசு மேடை நடன கலைஞர்கள் கோவில் திருவிழாக்களிலும் மேடைகளிலும் நடன நிகழ்ச்சி நடத்த அனுமதி அளித்துள்ள போதும் கோவை மாவட்டத்தில் மட்டும் கோவில் திருவிழாக்கள் மற்றும் மேடைகளில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

எனவே காவல் ஆணைர் கோவை மாவட்டம் முழுவதும் பரவலாகக் கோவில் திருவிழாக்களிலும் மேடைகளிலும் எங்களுடைய சங்கத்தின் மூலம் நடன நிகழ்ச்சி நடத்த உரிய அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்துள்ளதாகத் தெரிவித்தார். பிற மாவட்டங்களில் அனுமதி வழங்கப்பட்ட போதிலும் கோவை மாவட்டத்தில் மட்டும் அனுமதி வழங்கப்படுவதில்லை எனவும் வருத்தம் தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...