கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் அனுமதி இல்லாமல் பிளாஸ்டிக் சேகரித்த பெண் பலி..!

அனுமதி இல்லாமல் பல்வேறு நபர்கள் சட்டவிரோதமாக குப்பைகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை எடுத்து செல்வதாகவும், தற்போது உயிரிழந்த பெண் அனுமதி இல்லாமல் பிளாஸ்டிக் கழிகளை எடுக்க வந்தவர் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



கோவை: கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் குப்பைகளின் இடையே பெண் ஊழியர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வெள்ளலூர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் முருகன் இவரது மனைவி சிவகாமி (52). இவர்களுக்கு 3 பெண்கள் உள்ளிட்ட 4 குழந்தைகள் உள்ளனர். மேலும், சிவகாமி வெள்ளலூர் குப்பை கிடங்கில் குப்பைகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

இதனிடையே, சிவகாமி திடீரென மாயமானதால் அதிர்ச்சி அடைந்த அவர் மகள் பொன்னி, அப்பகுதியில் உள்ள குப்பைகளில் சோதனை செய்தனர்.



அப்போது, குப்பை கிடங்கில் ஒரு பகுதியில் குப்பைகளின் இடையே அவரது கால் மட்டும் வெளியே தெரிந்துள்ளது.

இதையடுத்து அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் சுயநினைவு இழந்த நிலையில் சிவகாமியை மீட்டனர்.



இதனிடையே, தகவல் அறிந்து அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சிவகாமியை சோதனை செய்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.



இதையடுத்து, அங்கு வந்த போத்தனூர் போலீசார் சிவகாமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதல் கட்ட விசாரணையில் சிவகாமி கீழே அமர்ந்து குப்பைகளைப் பிரித்த போது அங்கு இரண்டு டிப்பர் லாரிகளில் கொண்டு வந்த குப்பையைக் கொட்டும் போது தவறுதலாக அதில் சிக்கி உயிரிழந்தாரா? அல்லது வெயிலின் தாக்கத்தால் அவர் மயங்கி விழுந்தது தெரியாமல் அவரது மீது குப்பை கொட்டப்பட்டதா..? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது:-

வழக்கமாக வெள்ளலூர் குப்பை கிடங்கில் பிளாஸ்டிக் குப்பைகளைப் பிரித்தெடுக்கக் குறிப்பிட்ட ஒப்பந்ததாரருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இங்கு அனுமதி இல்லாமல் பல்வேறு நபர்கள் சட்டவிரோதமாக வந்து குப்பைகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை எடுத்துச் செல்கின்றனர். தற்போது உயிரிழந்த சிவகாமி என்பவரும் இங்கு அனுமதி இல்லாமல் பிளாஸ்டிக் கழிகளை எடுக்க வந்தவர் தான்.

பொதுவாக டிப்பர் லாரியில் இருந்து குப்பைகளைக் கொட்டும் பொழுது பிளாஸ்டிக் கழிவுகள் தனியாகப் பறந்து விழும், அதை எடுக்கச் சென்றபோது அவர் மீது குப்பை விழுந்திருக்கலாம், இருப்பினும் அவரது இழப்பிற்கான முழு காரணம் இதுவரை தெரியவில்லை என தெரிவித்தனர்.

ஏற்கனவே வெள்ளலூர் குப்பை கிடங்கில் அனுமதி இல்லாமல் வெளி நபர்கள் உள்ளே வராமல், இருக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரப்படுகிறது. தற்போது வெள்ளலூர் குப்பை கிடங்கைச் சுற்றிலும் மதில் சுவர்கள் கட்டப்பட உள்ளது.

மேலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. மேலும் அங்கு பணியில் ஈடுபடும் காவலாளிகளும் கடுமையான உத்தரவு போடப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் அனுமதியின்றி வேறு நபர்கள் உள்ளே வரமுடியாது எனவும் தெரிவித்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...