சிறப்புத்தூய்மைப்பணியின் மூலம் சேகரமாகும் குப்பைகளை உடனடியாக வாகனம் மூலம் ஏற்றி அப்புறப்படுத்திட அறிவுறுத்தினார்.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.29-க்குட்பட்ட கட்டபொம்மன் நகரில் சிறப்பு தூய்மைப்பணிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் தொடங்கி வைத்து, ஆய்வு செய்தார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.29-க்குட்பட்ட கட்டபொம்மன் நகரில் சிறப்பு தூய்மைப்பணிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார்இன்று (07.04.2022) தொடங்கி வைத்து, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.29-க்குட்பட்ட கட்டபொம்மன் நகரின் சாலையோரங்களில் உள்ள செடி கொடிகளை அகற்றுதல், தேங்கிய குப்பைகளை அகற்றுதல், மழைநீர் வடிகால் கால்வாயில் தேங்கியுள்ள செடி கொடிகள், பிளாஸ்டிக் பாட்டில்களை அகற்றிடவும் சுகாதார ஆய்வாளா்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், சிறப்புத்தூய்மைப்பணியின் மூலம் சேகரமாகும் குப்பைகளை உடனடியாக வாகனம் மூலம் ஏற்றி அப்புறப்படுத்திட அறிவுறுத்தினார். மேலும், அப்பகுதியில் தேங்கியுள்ள மரக்கழிவுகளை உரமாக தயாரிக்கும் மரம் அரைக்கும் இயந்திரத்தின் மூலம் மக்கும் குப்பையாக மாற்றிட அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா துணை மேயர் ரா.வெற்றிசெல்வன் வடக்கு மண்டல குழு தலைவர் வே.கதாரவேல், 29-வது வார்டு மாமன்ற உறுப்பின் கே.ரங்கநாயகி, வடக்கு மண்டல உதவி ஆணையாளார் மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளா் செந்தில்பாஸ்கர், உதவி நகரமைப்பு அலுவலர் (பொ) விமலா உதவி பொறியாளா் இளங்கோவன், மண்டல சுகாதார அலுவலா் இராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் உடனிருந்தனர்.