சம்பவ இடத்திற்கு வந்த போத்தனூர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை: கோவையில் வேலை கிடைக்காத விரக்தியில் பி.இ.பட்டதாரி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்தவர் விஜயன். இவரது மகன் சுதர்சன் (30) பி.இ. பட்டதாரியான சுதர்சன் பல்வேறு இடங்களில் வேலை தேடி வேலை கிடைக்காததால், கடந்த 3-நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை தேடி வந்துள்ளார்.
இதற்காக ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் மேன்ஷனில் அறை எடுத்து வசித்து வந்தார். ஆனால் அந்த தனியார் நிறுவனத்திலும் வேலை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் இருந்த சுதர்சன் அறையில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போத்தனூர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வாணியம்பாடியில் உள்ள சுதர்சன் குடும்பத்தாருக்கும் தகவல் அளித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.