கோவையில் நிலம் வாங்கி வீடு கட்டி தருவதாக மோசடி - தனியார் நிறுவன உரிமையாளருக்கு 10-ஆண்டு சிறை, ரூ.94.90-லட்சம் அபராதம்….!

மோசடி செய்த நிறுவன உரிமையாளருக்கு 10-ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.94.90-லட்சம் அபராதம் விதித்து கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.


கோவை: கோவையில் நிலம், வீடு கட்டித்தருவதாகக் கூறி மோசடி செய்த, தனியார் நிறுவன உரிமையாளருக்கு 10-ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூபாய் 94-லட்சத்து 90-ஆயிரம் அபராதம் விதித்து கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பளித்ததுள்ளது.

கோவை சுங்கம் பகுதியில் செயல்பட்டு வந்த “கோவை லேன்டு பேங்கர்ஸ்” என்ற நிறுவனம், தங்களது நிறுவனத்தில் 3-ல் ஒரு பங்கு செலுத்தி முதலீடு செய்தால் நிலமும், வீடும் கட்டித்தருவதாகக் கூறி விளம்பரப்படுத்தினார்.

இதையடுத்து மீதம் உள்ள தொகையை தங்கள் நிறுவனமே வங்கி மூலம் கடன் பெற்றுத் தருவோம் எனவும் கூறியுள்ளனர். இதனை நம்பி, பலர் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால், அறிவித்த படி நிறுவனம் சார்பில் எந்தவித நிலமும், வீடும் கட்டித்தரப்படாததால், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதலீட்டாளர்கள் கோவை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.

அதில், 2016-ஆம் ஆண்டு கோவையை அருணாச்சலம் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், 73-முதலீட்டாளர்களிடம் ரூ.95.55 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.

இந்த வழக்கு விசாரணை கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், நிறுவன உரிமையாளர் முத்துக்குமாருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.94.90 லட்சம் அபராதம் விதித்து கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...