கல்லூரி மாணவர்களே இயக்கி பணியாற்றியுள்ள இத்திரைப்படத்தில் அமைச்சர் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளதாக, கோவையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் படக்குழுவினர் தெரிவித்தனர்.
கோவை: அமைச்சர் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லும் படமாக ‘அமைச்சர்’ திரைப்படம் உருவாகியுள்ளதாக, கோவையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் படக்குழுவினர் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்ட சித்தோடு அருகே செயல்பட்டு வரும் ஸ்ரீ அம்மன் கலை அறிவியல் கல்லூரியின் விசுவல் கம்யூனிகேசன் பிரிவு மாணவர்கள் தயாரித்து, இயக்கியுள்ள திரைப்படம் ‘அமைச்சர்’.
நடிகர் ஜெய் ஆகாஷ், நடிகைகள் அக்ஷயா, தேவிகா, ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிகர் விஜயகுமார் நடித்துள்ளார்.
தேவா இசையில், மதன் கார்க்கி, கபிலன் வரிகளில் உருவாகியுள்ள இப்படத்தில், சர்வதேச விளையாட்டு வீரர் சவுந்திரராஜன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சி, கோயமுத்தூர் பிரஸ் கிளப் அரங்கில் இன்று நடைபெற்றது.
இதில் இந்நாள் மாணவர்கள் போஸ்டரை வெளியிட, கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பெற்றுக்கொண்டனர். முழுக்க கல்லூரி மாணவர்களே இயக்கி, பணியாற்றியுள்ள இத்திரைப்படத்தின் மூலம் ஒரு அமைச்சர் நாட்டிற்கு என்ன நல்ல விசயங்களைச் செய்ய வேண்டும் என்பதைச் சொல்லும் விதமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்ட சித்தோடு அருகே செயல்பட்டு வரும் ஸ்ரீ அம்மன் கலை அறிவியல் கல்லூரியின் விசுவல் கம்யூனிகேசன் பிரிவு மாணவர்கள் தயாரித்து, இயக்கியுள்ள திரைப்படம் ‘அமைச்சர்’.
நடிகர் ஜெய் ஆகாஷ், நடிகைகள் அக்ஷயா, தேவிகா, ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிகர் விஜயகுமார் நடித்துள்ளார்.
தேவா இசையில், மதன் கார்க்கி, கபிலன் வரிகளில் உருவாகியுள்ள இப்படத்தில், சர்வதேச விளையாட்டு வீரர் சவுந்திரராஜன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சி, கோயமுத்தூர் பிரஸ் கிளப் அரங்கில் இன்று நடைபெற்றது.
இதில் இந்நாள் மாணவர்கள் போஸ்டரை வெளியிட, கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பெற்றுக்கொண்டனர். முழுக்க கல்லூரி மாணவர்களே இயக்கி, பணியாற்றியுள்ள இத்திரைப்படத்தின் மூலம் ஒரு அமைச்சர் நாட்டிற்கு என்ன நல்ல விசயங்களைச் செய்ய வேண்டும் என்பதைச் சொல்லும் விதமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்தனர்.