அமைச்சர் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லும் படமாக ‘அமைச்சர்’ திரைப்படம் இருக்கும்..!

கல்லூரி மாணவர்களே இயக்கி பணியாற்றியுள்ள இத்திரைப்படத்தில் அமைச்சர் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளதாக, கோவையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் படக்குழுவினர் தெரிவித்தனர்.


கோவை: அமைச்சர் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லும் படமாக ‘அமைச்சர்’ திரைப்படம் உருவாகியுள்ளதாக, கோவையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் படக்குழுவினர் தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்ட சித்தோடு அருகே செயல்பட்டு வரும் ஸ்ரீ அம்மன் கலை அறிவியல் கல்லூரியின் விசுவல் கம்யூனிகேசன் பிரிவு மாணவர்கள் தயாரித்து, இயக்கியுள்ள திரைப்படம் ‘அமைச்சர்’.

நடிகர் ஜெய் ஆகாஷ், நடிகைகள் அக்‌ஷயா, தேவிகா, ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிகர் விஜயகுமார் நடித்துள்ளார்.

தேவா இசையில், மதன் கார்க்கி, கபிலன் வரிகளில் உருவாகியுள்ள இப்படத்தில், சர்வதேச விளையாட்டு வீரர் சவுந்திரராஜன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சி, கோயமுத்தூர் பிரஸ் கிளப் அரங்கில் இன்று நடைபெற்றது.

இதில் இந்நாள் மாணவர்கள் போஸ்டரை வெளியிட, கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பெற்றுக்கொண்டனர். முழுக்க கல்லூரி மாணவர்களே இயக்கி, பணியாற்றியுள்ள இத்திரைப்படத்தின் மூலம் ஒரு அமைச்சர் நாட்டிற்கு என்ன நல்ல விசயங்களைச் செய்ய வேண்டும் என்பதைச் சொல்லும் விதமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...