அடுத்தடுத்து இறக்கும் யானைகள்.. கோவையில் மேலும் ஒரு ஆண் யானை உயிரிழப்பு..!

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் அடுத்தடுத்து யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



கோவை: கோவையில் மேலும் ஒரு ஆண் யானை இறந்த நிலையில் கண்டியப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் போளூவாம்பட்டி, சிறுமுகை, பொள்ளாச்சி, கோவை வனச்சரகங்களில் சுமார் 11 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளது. ஏற்கனவே யானைகள் தொடர் உயிரிழப்பைத் தொடர்ந்து தமிழக வனத்துறை சார்பில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு அந்த குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மேட்டுப்பாளையம் அடுத்த கீழ் பில்லூர் அணை பகுதியில் மேட்டுப்பாளையம் வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இறந்த நிலையிலிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேட்டுப்பாளையம் வனச்சரகர், மாவட்ட வன அலுவலர் மற்றும் கால்நடை மருத்துவ அலுவலருக்குத் தகவல் அளித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வனத்துறை அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

இறந்த யானைக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொண்டால் மட்டும் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டத்தில் அடுத்தடுத்து யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...