இன்று காலை கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் டீ குடிக்க சென்ற தொழிலாளி மீது இரயில் மோதி இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: இன்று காலை கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் டீ குடிக்க சென்ற தொழிலாளி மீது இரயில் மோதி இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை நஞ்சுண்டாபுரம் மாரியம்மன் கோவில் வீதிபகுதியை சேர்ந்தவர் கருணாநிதி (55). இவர் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில், இன்று காலை வீட்டிலிருந்து அதே பகுதியில் உள்ள டீக்கடையில் டீ குடிக்கச் சென்றார். பின்னர், மீண்டும் வீட்டிற்கு வர அங்கிருந்த இரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றதாக தெரிகிறது.

அப்போது, அந்த வழியாக வந்த ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவர்பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அங்குள்ள பொதுமக்கள் போத்தனூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார், கருணாநிதி உடலைகைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காலையில் டீ குடிக்க கடைக்குச் சென்ற தொழிலாளி ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை நஞ்சுண்டாபுரம் மாரியம்மன் கோவில் வீதிபகுதியை சேர்ந்தவர் கருணாநிதி (55). இவர் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில், இன்று காலை வீட்டிலிருந்து அதே பகுதியில் உள்ள டீக்கடையில் டீ குடிக்கச் சென்றார். பின்னர், மீண்டும் வீட்டிற்கு வர அங்கிருந்த இரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றதாக தெரிகிறது.
அப்போது, அந்த வழியாக வந்த ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவர்பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அங்குள்ள பொதுமக்கள் போத்தனூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார், கருணாநிதி உடலைகைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காலையில் டீ குடிக்க கடைக்குச் சென்ற தொழிலாளி ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.