கோவையில் நாட்டு வெடிகுண்டு வைத்து காட்டுப்பன்றி வேட்டை - இருவர் கைது….!

கோவை காரமடை வனச்சரகம், வெள்ளியங்காடு சுற்று அருகே பிடிப்பட்ட இருவர் மீதும் வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 பிரிவு 9 மற்றும் 51(1) என்ற சட்டப் பிரிவில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவுட்டு காய் என்ற நாட்டு வெடிகுண்டு கடித்து வெடித்ததில், காயமடைந்த பெண் குட்டியானை ஒன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதனால், மாவட்டம் முழுவதும் வன எல்லைகளில் அவுட்டு காய் போன்ற நாட்டு வெடிகுண்டுகளை உள்ளதா? என வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை காரமடை வனச்சரகம், வெள்ளியங்காடு சுற்றுக்கு உட்பட்ட ஆதிமாதைனூர், கருப்பராயன் கோவில் அருகே உள்ள பள்ளத்தில் வன ஊழியர்கள் திடீரென இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அங்கு மூன்று பேர் காட்டுப்பன்றியை வெட்டி தனித்தனியாக கூறு போட்டுக் கொண்டிருந்தனர். வனத்துறை அதிகாரிகளை கண்டதும் கிட்டான் என்பவர் மட்டும் அங்கிருந்து தப்பி சென்றார். இதையடுத்து, அங்கிருந்த கவின் குமார் மற்றும் சின்னச்சாமி ஆகிய இருவரை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.

பின்னர், அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் நாட்டு வெடிகுண்டை வைத்து வன எல்லைக்கு வந்த காட்டு பன்றியை வேட்டையாடியதும், அதன்பிறகு பன்றியை கூறுபோட்டு தனித்தனியாக மூன்று பாகங்களாக பிரித்துக் கொண்டு இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, பிடிப்பட்ட இருவர் மீதும் வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 பிரிவு 9 மற்றும் 51(1) என்ற சட்டப் பிரிவில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், நாட்டு வெடிகுண்டுகளை எங்கு தயாரித்து வருகின்றனர் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...