விமான நிலையங்களில் ஓடுதளம் (ரன்வே), பத்தாண்டுகளுக்கு ஒரு முறை புனரமைப்பு செய்யப்படுவது வழக்கம். இந்த நிலையில், புனரமைப்பு பணி ஏப்ரல் முதல் வாரம் முதல் துவங்கியுள்ளது. இதன் காரணமாக, இரவு 10:00 மணி முதல் அதிகாலை 4:00 மணி வரை விமானங்கள் இயக்கம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை விமான நிலையத்தில் ஓடுதளம் புனரமைப்பு பணிகள் துவங்கியுள்ள காரணத்தால், இன்று இரவு 10:00 மணி முதல் அதிகாலை 3:00 மணி வரை கோவை விமான நிலையத்தில் விமானங்கள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது.
கோவை சர்வதேச விமான நிலையம், கோவை மற்றும் சுற்றுப்புறங்களை சேர்ந்த 7 மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது. கொரோனா நோய்தொற்று பரவலுக்கு முன் தினமும் முப்பத்தி மூன்று விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆண்டுதோறும் 30 லட்சம் மக்கள் விமான நிலையத்தை பயன்படுத்தினர்.
கொரோனா நோய் தொற்று பரவலுக்கு பின், தற்போது மெல்ல விமான நிலையம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. தற்போது, தினமும் 20 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில், விமான நிலைய ஓடுதளம் புனரமைப்பு பணிகள் துவக்கப்பட்டு உள்ள காரணத்தால் விமான சேவைகள் அனைத்தும் இரவு 10:00 மணி முதல் அதிகாலை 3:00 மணி வரை தடை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து விமான நிலைய வட்டாரங்கள் கூறியதாவது:-
விமான நிலையங்களில் ஓடுதளம் (ரன்வே), பத்தாண்டுகளுக்கு ஒரு முறை புனரமைப்பு செய்யப்படுவது வழக்கம். கோவை சர்வதேச விமான நிலையத்தில் தற்போது ஓடுதளம் (ரன்வே) புனரமைப்பு பணி ஏப்ரல் முதல் வாரம் முதல் துவங்கியுள்ளது. இதன் காரணமாக, இரவு 10:00 மணி முதல் அதிகாலை 4:00 மணி வரை விமானங்கள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு இரவு 11:30 மணி வரை விமான சேவை வழங்கப்பட்டது. ஓடுதள பராமரிப்பு பணி காரணமாக இரவு 10:00 மணிக்கு பின் இயக்கப்பட்டு வந்த விமானங்கள் அனைத்தும் இரவு 10:00 மணிக்கு முன்பே கோவையில் தரை இறங்கவும், மீண்டும் புறப்பட்டு செல்லும் வகையில் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அதிகாஸை 3:30 மணியளவில் ஷார்ஜாவில் இருந்து கோவையில் தரையிறங்கி மீண்டும் 4:00 மணியளவில் கோவையிலிருந்து ஷார்ஜா புறப்பட்டுச் செல்லும் 'ஏர் அரேபியா' விமானம் வழக்கம்போல் இயக்கப்படுகிறது.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் இரவு நேரத்தில் விமான சேவை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ள போதிலும், எமர்ஜென்சி காரணமாக ஏதேனும் விமானம் தரை இறங்க அனுமதி கேட்டால் அதற்கு அனுமதி அளிக்கப்படும். அதற்கேற்ப தயார் நிலையில் ஓடுதளம் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு ஏர்போர்ட் வட்டாரங்கள் தெரிவித்தன.
கோவை சர்வதேச விமான நிலையம், கோவை மற்றும் சுற்றுப்புறங்களை சேர்ந்த 7 மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது. கொரோனா நோய்தொற்று பரவலுக்கு முன் தினமும் முப்பத்தி மூன்று விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆண்டுதோறும் 30 லட்சம் மக்கள் விமான நிலையத்தை பயன்படுத்தினர்.
கொரோனா நோய் தொற்று பரவலுக்கு பின், தற்போது மெல்ல விமான நிலையம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. தற்போது, தினமும் 20 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில், விமான நிலைய ஓடுதளம் புனரமைப்பு பணிகள் துவக்கப்பட்டு உள்ள காரணத்தால் விமான சேவைகள் அனைத்தும் இரவு 10:00 மணி முதல் அதிகாலை 3:00 மணி வரை தடை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து விமான நிலைய வட்டாரங்கள் கூறியதாவது:-
விமான நிலையங்களில் ஓடுதளம் (ரன்வே), பத்தாண்டுகளுக்கு ஒரு முறை புனரமைப்பு செய்யப்படுவது வழக்கம். கோவை சர்வதேச விமான நிலையத்தில் தற்போது ஓடுதளம் (ரன்வே) புனரமைப்பு பணி ஏப்ரல் முதல் வாரம் முதல் துவங்கியுள்ளது. இதன் காரணமாக, இரவு 10:00 மணி முதல் அதிகாலை 4:00 மணி வரை விமானங்கள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு இரவு 11:30 மணி வரை விமான சேவை வழங்கப்பட்டது. ஓடுதள பராமரிப்பு பணி காரணமாக இரவு 10:00 மணிக்கு பின் இயக்கப்பட்டு வந்த விமானங்கள் அனைத்தும் இரவு 10:00 மணிக்கு முன்பே கோவையில் தரை இறங்கவும், மீண்டும் புறப்பட்டு செல்லும் வகையில் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அதிகாஸை 3:30 மணியளவில் ஷார்ஜாவில் இருந்து கோவையில் தரையிறங்கி மீண்டும் 4:00 மணியளவில் கோவையிலிருந்து ஷார்ஜா புறப்பட்டுச் செல்லும் 'ஏர் அரேபியா' விமானம் வழக்கம்போல் இயக்கப்படுகிறது.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் இரவு நேரத்தில் விமான சேவை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ள போதிலும், எமர்ஜென்சி காரணமாக ஏதேனும் விமானம் தரை இறங்க அனுமதி கேட்டால் அதற்கு அனுமதி அளிக்கப்படும். அதற்கேற்ப தயார் நிலையில் ஓடுதளம் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு ஏர்போர்ட் வட்டாரங்கள் தெரிவித்தன.