கோவை மாநகராட்சியில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் என்ற சிறப்பு திட்டம் கொண்டு வரப்படும் - அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனை அருகில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை, மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். அங்கு நீர் மோர், தர்பூசணி, இளநீர் ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.



கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனை அருகில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை, மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.



அங்கு நீர் மோர், தர்பூசணி, இளநீர் ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் புதிய மின் உற்பத்தி திட்டங்கள் எதுவும் செயல்பாட்டிற்கு கொண்டு வரவில்லை எனவும் 10 ஆண்டுகளாக கலைஞரால் கொண்டு வரப்பட்ட திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டிருந்ததாக குற்றம் சாட்டினார்.

அவ்வாறு கிடப்பில் போடப்பட்ட திட்டங்களை முதல்வர் ஆய்வு செய்து விரைவாக முடிக்க உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த கோடையில் 17 ஆயிரத்து 300 மெகாவாட் மின்சாரம் பூர்த்தி செய்யக்கூடிய அளவிற்கு பணிகள் நிறைவு செய்யப்பட உள்ளதாக, அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்ய 72,000 டன் நிலக்கரி தேவை என்றும், ஆனால் 48-50 ஆயிரம் டன் நிலக்கரி தான் ஒன்றிய அரசு வழங்குகிறது. இந்த நிலக்கரி பற்றக்குறையை போக்குவதற்கு 4 லட்சத்து 80 ஆயிரம் டன் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆண்டு மின் தேவையை பூர்த்தி செய்யவும் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாக, தெரிவித்தார்.

கோவை திருச்சி சாலையில் மேம்பால பணிகள் தேங்கி இருப்பதற்கு, வழக்குகளே காரணம் என தெரிவித்த அமைச்சர், அவர் வழக்கு தாக்கல் செய்தவர்களிடம் அழைத்து பேசியதாகவும் மீண்டும் அவர்களை அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்காமலேயே மேம்பால பணிகள் நடைபெற்றது தான் இந்த தாமதத்திற்கு காரணம், என்று தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தை பொருத்தவரை முதல்வர் தனி கவனம் செலுத்தி வருவதாகவும், என்னென்ன திட்டங்கள் தேவை என்பதை கேட்டு நிறைவு செய்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சீரான முறையில் தண்ணீர் கிடைக்க பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவாக அந்த பணிகள் முடிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் என்ற சிறப்புத் திட்டம் கோவை மாநகராட்சிக்கு கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் மெட்ரோ ரயில் சேவை திட்டத்தைப் பொறுத்தவரை நிதி ஆதாரம் பெறப்பட்டு அதன் பின்னர் திட்டம் நிறைவேற்றப்படும், என தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...