கோவையில் பள்ளி மாணவனை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த விவகாரம்: 2-பிரிவில் வழக்குப்பதிவு….!

3-ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் மீது குழந்தை வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



கோவை: கோவை செம்மேடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 3 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனைக் கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்த விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும்உதவி தலைமை ஆசிரியர் மீது குழந்தை வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை செம்மேடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் படிக்கும் 3-ஆம் வகுப்பு சிறுவனைக் கடந்த மார்ச் 29 ஆம் தேதி, கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்தாகவும், கேட்கச் சென்ற மாணவனின் தாயைப் பார்த்து அறுவெறுப்பாக இருப்பதாக ஆசிரியர்கள் கூறியதாகச் சிறுவனின் தாயார் ஆலாந்துறை போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து சம்பவம் தொடர்பாக மாவட்ட கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர், பேரூர் சரக துணை காவல் கண்காணிப்பாளர், ஆலாந்துறை காவல் ஆய்வாளர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் செம்மேடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்குச் சென்று பள்ளி குழந்தைகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.



பள்ளிச் சிறுவனைக் கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்ததோடு, மாணவனின் தாயை மரியாதைக் குறைவாக நடத்திய அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயந்தி, உதவி தலைமை ஆசிரியர் தங்க மாரியம்மாள் ஆகிய இருவர் மீதும் sc/st வன்கொடுமை தடுப்பு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...