கோவையில் பள்ளி மாணவனை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த விவகாரம்: 2-பிரிவில் வழக்குப்பதிவு….!

3-ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் மீது குழந்தை வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



கோவை: கோவை செம்மேடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 3 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனைக் கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்த விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும்உதவி தலைமை ஆசிரியர் மீது குழந்தை வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை செம்மேடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் படிக்கும் 3-ஆம் வகுப்பு சிறுவனைக் கடந்த மார்ச் 29 ஆம் தேதி, கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்தாகவும், கேட்கச் சென்ற மாணவனின் தாயைப் பார்த்து அறுவெறுப்பாக இருப்பதாக ஆசிரியர்கள் கூறியதாகச் சிறுவனின் தாயார் ஆலாந்துறை போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து சம்பவம் தொடர்பாக மாவட்ட கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர், பேரூர் சரக துணை காவல் கண்காணிப்பாளர், ஆலாந்துறை காவல் ஆய்வாளர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் செம்மேடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்குச் சென்று பள்ளி குழந்தைகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.



பள்ளிச் சிறுவனைக் கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்ததோடு, மாணவனின் தாயை மரியாதைக் குறைவாக நடத்திய அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயந்தி, உதவி தலைமை ஆசிரியர் தங்க மாரியம்மாள் ஆகிய இருவர் மீதும் sc/st வன்கொடுமை தடுப்பு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...