ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதை கண்டித்து, இன்று காலை மேற்கு மண்டல சுகாதார அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
கோவை:கோவை மாநகராட்சியில் பணி புரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள், இன்று காலை மேற்கு மண்டல சுகாதார அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

கோவை மாநகராட்சி பணி புரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் 7 பேரை பணியில் இருந்து நீக்கிய, சுகாதார ஆய்வாளர் மற்றும் சுகாதார மேற்பார்வையாளரை கண்டித்து, இன்று கோவை மேற்கு மண்டல அலுவலகம் முன்புதூய்மைப் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

இது குறித்து பேசிய தூய்மை பணியாளர் ஒருவர்: "கடந்த ஐந்தாண்டு காலம் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்த நிலையில், இன்றைக்கு பணிபுரிவதற்கு ஆட்கள் நிறைய இருப்பதால், உங்களுக்குஇங்கு வேலை இல்லை என்று மேற்கு மண்டல சுகாதார ஆய்வாளரும், சுகாதார மேற்பார்வையாளரும் தெரிவித்துள்ளனர்.
வேலையில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ள இந்த 7 துப்புறவு பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்ககோரி இந்த போராட்டம் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும், பணி நீக்கம் செய்யப்பட்டபணியாளர்களின் குடும்பங்களையும் கருத்தில் கொண்டு இவர்களுக்கு மீண்டும் பணி வழங்கிட வேண்டும்", என்று தெரிவித்தார்.

கோவை மாநகராட்சி பணி புரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் 7 பேரை பணியில் இருந்து நீக்கிய, சுகாதார ஆய்வாளர் மற்றும் சுகாதார மேற்பார்வையாளரை கண்டித்து, இன்று கோவை மேற்கு மண்டல அலுவலகம் முன்புதூய்மைப் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
இது குறித்து பேசிய தூய்மை பணியாளர் ஒருவர்: "கடந்த ஐந்தாண்டு காலம் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்த நிலையில், இன்றைக்கு பணிபுரிவதற்கு ஆட்கள் நிறைய இருப்பதால், உங்களுக்குஇங்கு வேலை இல்லை என்று மேற்கு மண்டல சுகாதார ஆய்வாளரும், சுகாதார மேற்பார்வையாளரும் தெரிவித்துள்ளனர்.
வேலையில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ள இந்த 7 துப்புறவு பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்ககோரி இந்த போராட்டம் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும், பணி நீக்கம் செய்யப்பட்டபணியாளர்களின் குடும்பங்களையும் கருத்தில் கொண்டு இவர்களுக்கு மீண்டும் பணி வழங்கிட வேண்டும்", என்று தெரிவித்தார்.