'கோடைக்கால குடிநீர் தட்டுப்பாடு'... கோவையில் குடிநீர் விநியோகம் என்பதே பெரும் சவாலாக உள்ளது: கவுன்சிலர் தனலெட்சுமி

இன்றைய சூழலில் குடிநீர் விநியோகம் என்பதே பெரும் சவாலாக உள்ளது என கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டல தலைவரும் 94-வது வார்டு கவுன்சிலருமான தனலெட்சுமி தெரிவித்துள்ளார்.


கோவை: கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு குறித்து தெற்கு மண்டல தலைவரும் 94-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான தனலெட்சுமி குடிநீர் விநியோகம் என்பதே பெரும் சவாலாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சியில் கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு குறித்து தொடர்ச்சியான புகார்கள் எழுந்துகொண்டுதான் இருக்கின்றது. மேலும், வார்டுகளுக்கு இடையே சரிசமமான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை என்றும் பரவலாகக் குற்றம்சாட்டப்படுகின்றது.

இதுகுறித்து கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டல தலைவரும் 94-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான தனலெட்சுமி கூறியதாவது:-

கோவை மாநகராட்சியில் பொதுமக்கள் முன்வைக்கும் மூன்று முக்கிய கோரிகைகள் குடிநீர், சாலைகள் சீரமைத்தல், பாதாளச் சாக்கடை அமைத்து தருவதாகவே உள்ளது. இதில் குடிநீர் தட்டுப்பாடு என்பது அனைவரின் முக்கிய கோரிக்கையாக இருக்கின்றது என தெரிவித்தார்.

மேலும், ஆய்வுக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் குடிநீர் தட்டுப்பாடு இருப்பதால் இதனைக் குறித்து உதவி பொறியாளரிடம் கேள்வி எழுப்பியதற்கு, விளக்கவுரையும் தண்ணீர் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.

மேலும், 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார் என தெரிவித்தார். குடிநீர் பிரச்சனைக்கு அடுத்தபடியாக கவனிக்க வேண்டிய சாலை சீரமைத்தல் என்பது பாதாளச் சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்டுள்ள குழிகளை மேம்படுத்திய பிறகு சாலை சீரமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...