இன்றைய சூழலில் குடிநீர் விநியோகம் என்பதே பெரும் சவாலாக உள்ளது என கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டல தலைவரும் 94-வது வார்டு கவுன்சிலருமான தனலெட்சுமி தெரிவித்துள்ளார்.
கோவை: கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு குறித்து தெற்கு மண்டல தலைவரும் 94-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான தனலெட்சுமி குடிநீர் விநியோகம் என்பதே பெரும் சவாலாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சியில் கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு குறித்து தொடர்ச்சியான புகார்கள் எழுந்துகொண்டுதான் இருக்கின்றது. மேலும், வார்டுகளுக்கு இடையே சரிசமமான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை என்றும் பரவலாகக் குற்றம்சாட்டப்படுகின்றது.
இதுகுறித்து கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டல தலைவரும் 94-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான தனலெட்சுமி கூறியதாவது:-
கோவை மாநகராட்சியில் பொதுமக்கள் முன்வைக்கும் மூன்று முக்கிய கோரிகைகள் குடிநீர், சாலைகள் சீரமைத்தல், பாதாளச் சாக்கடை அமைத்து தருவதாகவே உள்ளது. இதில் குடிநீர் தட்டுப்பாடு என்பது அனைவரின் முக்கிய கோரிக்கையாக இருக்கின்றது என தெரிவித்தார்.
மேலும், ஆய்வுக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் குடிநீர் தட்டுப்பாடு இருப்பதால் இதனைக் குறித்து உதவி பொறியாளரிடம் கேள்வி எழுப்பியதற்கு, விளக்கவுரையும் தண்ணீர் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.
மேலும், 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார் என தெரிவித்தார். குடிநீர் பிரச்சனைக்கு அடுத்தபடியாக கவனிக்க வேண்டிய சாலை சீரமைத்தல் என்பது பாதாளச் சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்டுள்ள குழிகளை மேம்படுத்திய பிறகு சாலை சீரமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
கோவை மாநகராட்சியில் கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு குறித்து தொடர்ச்சியான புகார்கள் எழுந்துகொண்டுதான் இருக்கின்றது. மேலும், வார்டுகளுக்கு இடையே சரிசமமான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை என்றும் பரவலாகக் குற்றம்சாட்டப்படுகின்றது.
இதுகுறித்து கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டல தலைவரும் 94-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான தனலெட்சுமி கூறியதாவது:-
கோவை மாநகராட்சியில் பொதுமக்கள் முன்வைக்கும் மூன்று முக்கிய கோரிகைகள் குடிநீர், சாலைகள் சீரமைத்தல், பாதாளச் சாக்கடை அமைத்து தருவதாகவே உள்ளது. இதில் குடிநீர் தட்டுப்பாடு என்பது அனைவரின் முக்கிய கோரிக்கையாக இருக்கின்றது என தெரிவித்தார்.
மேலும், ஆய்வுக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் குடிநீர் தட்டுப்பாடு இருப்பதால் இதனைக் குறித்து உதவி பொறியாளரிடம் கேள்வி எழுப்பியதற்கு, விளக்கவுரையும் தண்ணீர் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.
மேலும், 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார் என தெரிவித்தார். குடிநீர் பிரச்சனைக்கு அடுத்தபடியாக கவனிக்க வேண்டிய சாலை சீரமைத்தல் என்பது பாதாளச் சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்டுள்ள குழிகளை மேம்படுத்திய பிறகு சாலை சீரமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.