கோவையில் 'இல்லம் தேடி மருத்துவம்' பணியாளர்கள் மனு; சம்பள நிலுவை, ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை

மாத சம்பளத்தை உயர்த்தி தர கோரியும் நிலுவையில் உள்ள சம்பளத்தை பெற்று தர வலியுறுத்தியும், கோவை மாவட்டம் ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட "இல்லம் தேடி மருத்துவம்", பணியாளர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: மாத சம்பளத்தை உயர்த்தி தர கோரியும் நிலுவையில் உள்ள சம்பளத்தை பெற்று தர வலியுறுத்தியும், கோவை மாவட்டம் ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட இல்லம் தேடி மருத்துவம் பணியாளர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தமிழக சுகாதாரத் துறை சார்பாக மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம், மக்களின் இல்லங்களுக்கு சென்று முக்கியமான மருந்து சேவைகளான - ரத்த அழுத்த நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை, நீரிழிவு நோய்க்கான மருந்துகளை வழங்குதல் இயன்முறை சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றன.



இந்தநிலையில், இல்லம் தேடி மருத்துவம் பணியாளர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், தங்களுக்கு மாத சம்பளமாக ரூபாய் 4500 வழங்கப்பட்டு வரும் நிலையில், அதனை உயர்த்தி தர வேண்டும் எனவும், நிலுவையில் உள்ள சம்பளத்தை பெற்று தர வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

அனைத்து நாட்களுமே தங்களை பணிக்கு வர கட்டாயப்படுத்துவதாக தெரிவித்த அவர்கள், முன்களப்பணியாளர்களான தங்களுக்கு ஊக்கத்தொகை அளிக்க வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக்கொண்டனர்.



"உடனடியாக, எங்கள் கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றி தர வேண்டும். இல்லையெனில், முத்ல்வரை நேரில் சந்திக்க உள்ளோம்", என்று தெரிவித்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...