மாத சம்பளத்தை உயர்த்தி தர கோரியும் நிலுவையில் உள்ள சம்பளத்தை பெற்று தர வலியுறுத்தியும், கோவை மாவட்டம் ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட "இல்லம் தேடி மருத்துவம்", பணியாளர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவை: மாத சம்பளத்தை உயர்த்தி தர கோரியும் நிலுவையில் உள்ள சம்பளத்தை பெற்று தர வலியுறுத்தியும், கோவை மாவட்டம் ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட இல்லம் தேடி மருத்துவம் பணியாளர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தமிழக சுகாதாரத் துறை சார்பாக மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம், மக்களின் இல்லங்களுக்கு சென்று முக்கியமான மருந்து சேவைகளான - ரத்த அழுத்த நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை, நீரிழிவு நோய்க்கான மருந்துகளை வழங்குதல் இயன்முறை சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், இல்லம் தேடி மருத்துவம் பணியாளர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், தங்களுக்கு மாத சம்பளமாக ரூபாய் 4500 வழங்கப்பட்டு வரும் நிலையில், அதனை உயர்த்தி தர வேண்டும் எனவும், நிலுவையில் உள்ள சம்பளத்தை பெற்று தர வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
அனைத்து நாட்களுமே தங்களை பணிக்கு வர கட்டாயப்படுத்துவதாக தெரிவித்த அவர்கள், முன்களப்பணியாளர்களான தங்களுக்கு ஊக்கத்தொகை அளிக்க வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக்கொண்டனர்.

"உடனடியாக, எங்கள் கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றி தர வேண்டும். இல்லையெனில், முத்ல்வரை நேரில் சந்திக்க உள்ளோம்", என்று தெரிவித்தனர்.
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தமிழக சுகாதாரத் துறை சார்பாக மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம், மக்களின் இல்லங்களுக்கு சென்று முக்கியமான மருந்து சேவைகளான - ரத்த அழுத்த நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை, நீரிழிவு நோய்க்கான மருந்துகளை வழங்குதல் இயன்முறை சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், இல்லம் தேடி மருத்துவம் பணியாளர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், தங்களுக்கு மாத சம்பளமாக ரூபாய் 4500 வழங்கப்பட்டு வரும் நிலையில், அதனை உயர்த்தி தர வேண்டும் எனவும், நிலுவையில் உள்ள சம்பளத்தை பெற்று தர வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
அனைத்து நாட்களுமே தங்களை பணிக்கு வர கட்டாயப்படுத்துவதாக தெரிவித்த அவர்கள், முன்களப்பணியாளர்களான தங்களுக்கு ஊக்கத்தொகை அளிக்க வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக்கொண்டனர்.
"உடனடியாக, எங்கள் கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றி தர வேண்டும். இல்லையெனில், முத்ல்வரை நேரில் சந்திக்க உள்ளோம்", என்று தெரிவித்தனர்.