'புலம்பவைக்கும் டீசல் விலை உயர்வு'... கோவையில் 5,000-லாரி உரிமையாளர்கள் கடந்த 2-ஆண்டுகளில் தொழிலையே விட்டுச்செல்லும் அளவுக்கு நெருக்கடி..!

டீசல் விலை உயர்வு காரணமாக ஏற்பட்ட நெருக்கடி மற்றும் டயர் உள்ளிட்ட உதிரிப்பாகங்களின் விலை உயர்வு காரணமாக தொழிலை நடத்த முடியாமல் லாரிகளை விற்பனை செய்துவிட்டு தொழிலை விட்டே சென்று விட்டனர்.





கோவை: தொடர்ந்து அதிகரித்து வரும் டீசல் விலை மற்றும் உதிரிப்பாகங்கள் விலை உயர்வு காரணமாக ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் கோவையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 5,000 லாரி உரிமையாளர்கள் லாரிகளை விற்பனை செய்து தொழிலை விட்டு சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து கோவை லாரி உரிமையாளர்கள் சங்கத்தின்(CLOA) முன்னாள் தலைவர், கே.ஆர். ஆறுமுகம் கூறியதாவது:-

பெட்ரோல், டீசல் விலை உயர்வு சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படுகிறது. இது தவிர்க்க முடியாது என்றபோதும் நடுத்தர மக்கள் மற்றும் லாரி தொழில் செய்து வருபவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் 25 ஆயிரம் லாரிகள் இருந்தன. தற்போது 15 ஆயிரம் லாரிகள் மட்டுமே உள்ளன. ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள், இவர்களில் பெரும்பாலானவர்கள் ஒன்று அல்லது இரண்டு லாரிகளை வைத்திருந்தவர்கள் டீசல் விலை உயர்வு காரணமாக ஏற்பட்ட நெருக்கடி மற்றும் டயர் உள்ளிட்ட உதிரிப்பாகங்கள் விலை உயர்வு காரணமாகத் தொழிலை நடத்த முடியாமல் லாரிகளை விற்பனை செய்துவிட்டு தொழிலை விட்டே சென்று விட்டனர்.

இன்றைய சூழலில் லாரி டிரைவர்கள் மற்றும் களீனர்கள் கிடைப்பதில்லை. தொழிலில் நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது தொழில் நடத்தி வரும் லாரி உரிமையாளர்கள் பலர் வேறு தொழில் செய்ய தெரியாத காரணத்தால் இதே தொழிலை நெருக்கடியிலும் நடத்த வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...