'புலம்பவைக்கும் டீசல் விலை உயர்வு'... கோவையில் 5,000-லாரி உரிமையாளர்கள் கடந்த 2-ஆண்டுகளில் தொழிலையே விட்டுச்செல்லும் அளவுக்கு நெருக்கடி..!

டீசல் விலை உயர்வு காரணமாக ஏற்பட்ட நெருக்கடி மற்றும் டயர் உள்ளிட்ட உதிரிப்பாகங்களின் விலை உயர்வு காரணமாக தொழிலை நடத்த முடியாமல் லாரிகளை விற்பனை செய்துவிட்டு தொழிலை விட்டே சென்று விட்டனர்.





கோவை: தொடர்ந்து அதிகரித்து வரும் டீசல் விலை மற்றும் உதிரிப்பாகங்கள் விலை உயர்வு காரணமாக ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் கோவையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 5,000 லாரி உரிமையாளர்கள் லாரிகளை விற்பனை செய்து தொழிலை விட்டு சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து கோவை லாரி உரிமையாளர்கள் சங்கத்தின்(CLOA) முன்னாள் தலைவர், கே.ஆர். ஆறுமுகம் கூறியதாவது:-

பெட்ரோல், டீசல் விலை உயர்வு சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படுகிறது. இது தவிர்க்க முடியாது என்றபோதும் நடுத்தர மக்கள் மற்றும் லாரி தொழில் செய்து வருபவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் 25 ஆயிரம் லாரிகள் இருந்தன. தற்போது 15 ஆயிரம் லாரிகள் மட்டுமே உள்ளன. ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள், இவர்களில் பெரும்பாலானவர்கள் ஒன்று அல்லது இரண்டு லாரிகளை வைத்திருந்தவர்கள் டீசல் விலை உயர்வு காரணமாக ஏற்பட்ட நெருக்கடி மற்றும் டயர் உள்ளிட்ட உதிரிப்பாகங்கள் விலை உயர்வு காரணமாகத் தொழிலை நடத்த முடியாமல் லாரிகளை விற்பனை செய்துவிட்டு தொழிலை விட்டே சென்று விட்டனர்.

இன்றைய சூழலில் லாரி டிரைவர்கள் மற்றும் களீனர்கள் கிடைப்பதில்லை. தொழிலில் நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது தொழில் நடத்தி வரும் லாரி உரிமையாளர்கள் பலர் வேறு தொழில் செய்ய தெரியாத காரணத்தால் இதே தொழிலை நெருக்கடியிலும் நடத்த வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...