அவசர அழைப்புக்கு புதிய செயலி: பொதுமக்களின் பயன்பாட்டுக்கு “காவல் உதவி” செயலியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

60-சிறப்பு பயன்பாடுகளுடன் இந்த காவல் உதவி செயலியில் இருப்பதாகவும், இதன் மூலம் மகளிர், சிறார்கள், முதியவர்கள் என யாராக இருந்தாலும், தங்கள் புகாரை அளிக்கலாம் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழக காவல்துறையின் “காவல் உதவி” என்ற புதிய செயலியை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

தமிழக காவல்துறையில் பொதுமக்கள் - அவசர காலத்தில் தங்கள் புகார் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கும் வகையில், காவலன் என்ற செயலி ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் பல்வேறு புதிய அம்சங்களுடன் கூடிய “காவல் உதவி” என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி பயன்பாட்டிற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ள நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் “காவல் உதவி” செயலியை துவக்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறும்போது:-

இந்த காவல் உதவி செயலி மூலம் பொதுமக்கள் தங்கள் அவசர காலப் புகார்களை உடனடியாக காவல் துறைக்கு தெரிவிக்க முடியும், அதே போல் அவசர காலத்தில் சிறிய வீடியோவுடன் அவர்கள் இருக்கும் இடத்தையும் காண்பிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் 60 சிறப்பு பயன்பாடுகளுடன் காவல் உதவி செயலியில் இருப்பதாகவும், இதன் மூலம் மகளிர், சிறார்கள், முதியவர்கள் என யாராக இருந்தாலும், தங்கள் புகாரை அளிக்கலாம் என தெரிவித்தார்.

மேலும் தற்போதைய காவல் உதவி செயலி ஒரு புரட்சிகரமான முன்னேற்பாடு என்றும், ஏற்கனவே உள்ள காவலன் செயலியில் சுமார் 10 லட்சம் பேர் பதிவு செய்துள்ள நிலையில், மேலும் 10 லட்சம் பேர் இணைக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...