கோவையில் காதல் மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர் கைது - மது போதையில் உளறிய போது சிக்கினார்.

கோவையில் 10 ஆண்டுகள் காதலித்து, 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்த பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த ஆட்டோ ஓட்டுநரை போத்தனூர் போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை போத்தனூர், காமராஜர் நகர் பகுதியில் மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்த நாகார்ஜூன் என்ற ஆட்டோ ஓட்டுநரை, போத்தனூர் போலீசார் கைது செய்தனர்.

கோவை போத்தனூர் காமராஜர் நகர் பகுதியைசேர்ந்த ராமசாமி என்பவரது மகன் நாகார்ஜூன். ஆட்டோ ஓட்டுநரான இவர்,அதே பகுதியை சேர்ந்த சர்மிளா என்ற பெண்ணை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து, கடந்தநான்கு மாதங்களுக்கு முன்புதிருமணம் செய்துள்ளார்.

அவர்களது திருமணத்தை வீட்டில் யாரும் ஏற்று கொள்ளாததால்,சுந்தராபுரம் காந்திநகர் பகுதியில் தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களாக சர்மிளா தனது செல்போனில் சந்தேகத்திற்கிடமாக யாரிடமோ பேசி வருவதாக நாகார்ஜூன் சந்தேகம் அடைந்து, இது குறித்து தட்டிக்கேட்டு வந்ததால்,இருவருக்குமிடையே தொடர் பிரச்சினை இருந்து வந்துள்ளது.



இதனிடையே, நேற்று பிற்பகல் வீட்டிற்கு சென்ற நாகார்ஜூன் தனது மனைவிக்கு தகாத உறவு இருப்பதாக சந்தேகித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்ட சூழலில் திடீரென அங்கிருந்த கத்தியை எடுத்து சர்மிளாவை சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு தப்பியுள்ளார்.

பின்னர், வழக்கம்போல் இரவில் மது அருந்த சென்ற நாகார்ஜூன், போதையில் தனது நண்பர்களிடம் இது குறித்து பேசிய நிலையில், மனைவியை கொலை செய்தது அம்பலமானது. பின்னர், அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில், விரைந்து சென்ற போத்தனூர் காவல்நிலைய போலீசார், சுந்தராபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்த நாகார்ஜூனை கைது செய்தனர்.



மேலும், வீட்டில் சடலமாக கிடந்த சர்மிளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பத்து ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்த இளம் பெண்ணை நான்கே மாதத்தில், சந்தேகத்தின் பேரில் கொலை செய்த சம்பவம் சுந்தறாபுரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...